புதன், 31 ஆகஸ்ட், 2016

மணலிக் கீரை-மார்பு சளி நீங்கும்

ஒவ்வொரு கீரைக்கும், ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளன. ஆனால், அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை. நமக்கு தெரிந்த, சில கீரை வகைகளை தான் தொடர்ந்து உட்கொண்டு வருகிறோம். இதில், மிகவும் சிறப்பு வாய்ந்தது மணலிக் கீரை. மணலிக்கீரை பூண்டு இனத்தை சேர்ந்தது. இது, தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும் கீரை. பஞ்சாப், சிந்து சமவெளி போன்ற இடங்களிலும், வளரக்கூடியவை. சமையலுக்கு பயன்படுத்தும்
கீரைகளில் ஒன்று. இதை மணல் கீரை, நாவமல்லிக் கீரை என்றும் அழைப்பர். இதன் இலை, தண்டு, வேர் அனைத்தும், மருத்துவக் குணம் கொண்டவை. முன்னோர்கள், மருத்துவத்துக்கு பயன்படுத்திய கீரைகளில், இதுவும் இடம் பெற்றுள்ளது.
வயிற்றுப் பூச்சி நீங்க: குழந்தைகளின் வயிற்றில் கிருமிகளின் தாக்கம் இருந்தால், மிகவும் சோர்ந்து பலவீனமடைந்து விடுவர். ஏனென்றால், உடலுள்ள சத்துக்களை, கிருமிகள் உறிஞ்சி விடுவதே இதற்கு காரணம். இதை அகற்ற, மணலிக் கீரையை சிறிது அரைத்து, நீரில் கலந்து அதிகாலையில், வெறும் வயிற்றில், மூன்று நாட்கள் குடித்து, மீண்டும் 4 நாட்கள் இடைவெளிக்கு பின், 3 நாட்கள் குடித்து வந்தால், தட்டைப் புழுக்கள் நீங்கும்.
மலச்சிக்கல் நீங்க: பொதுவாக, கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. மணலிக் கீரையை, வாரம் இருமுறை பாசிப்பருப்புடன் கூட்டு செய்து, சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை நீங்கும்.
மார்புச்சளி நீங்கும்: மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக் கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். இக்கீரையை குடிநீரில் கலந்து குடிக்கலாம். அல்லது கீரையை நன்கு அலசிய பின், சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிடலாம் அல்லது கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலும் மார்புச்சளி நீங்கும்.
ஞாபக சக்தி பெருக: ஞாபக மறதி என்பது, அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். பித்தம் அதிகரித்தாலும், மூளைக்கு தேவையான சத்துகள் குறைந்தாலும் ஞாபக மறதி ஏற்படும். இக்குறையை நீக்க, மணலிக் கீரையை, மசியல் செய்து உண்பது நல்லது.
ஈரல் பலம் பெற: ஈரல் பாதிக்கப்பட்டால், உடலின் உறுப்புகளும் பாதிக்கப்படும்; ரத்தம் சீர்கெடும். பார்வை குறையும். ஈரலைப் பலப்படுத்த, மணலிக்கீரை கஷாயம் செய்து தினமும் குடித்தால், ஈரல் பலம் பெறும்.
மார்பு பகுதியில், சளி கட்டிக்கொள்வதால், தொடர்ந்து, இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. மார்பு சளியைப் போக்க, மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால், நீங்கும் அல்லது மணலிக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, அதனுடன் தேன் கலந்து காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட மார்பு சளியும் காணாமல் போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.