புதன், 31 ஆகஸ்ட், 2016

தாங்க முடியாத வலிகளால் அவதிப்படுகிறீர்களா? இதுதான் காரணம்

Image result for வலி
சிலருக்கு தாங்க முடியாத தலைவலி சிறு வயதிலிருந்தே இருக்கும். சிலர் கால் வலி, தோள்பட்டை வலி, கழுத்து வலி என எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
பரிசோதனையிலும் ஒன்றுமில்லை என மருத்துவர்கள் சொல்லியிருப்பார்கள்.ஆனாலும் இவை வாழ் நாள் முழுவதும் தொடர்ந்துகொண்டேயிருக்கும். இது போன்ற நாள்பட்ட வலிகளுக்கு என்னதான் காரணம்? மரபணு.
நமது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கோ இந்த மாதிரியான வலி இருந்தால்,அது அடுத்த சந்ததியினருக்கும் தொடரும் என ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. இந்த மாதிரியான நாள்பட்ட வலிகளை ஏற்படுத்தும் மரபணு, பெற்றோரிடமிருந்து அடுத்த சந்ததியினருக்கு கடத்திச் செல்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த இரு பல்கலைக் கழகங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது. வலிகள் எதனால் ஏற்படுகிறது. நாள்பட்ட வலிகளுக்கு காரணமென்ன என ஆய்வு செய்தத்தில் இது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவிலுல்ள வாண்டர் பில்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் அமெண்டா ஸ்டோன் என்ற ஆராய்ச்சியாளர் மற்றும் ஓரிகன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் அன்னா வில்சன் ஆகிய இருவரும் இந்த ஆய்வை நடத்தினர்.
அப்பாவோ அல்லது அம்மாவோ நாள்பட்ட வலிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அது நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இது கரு உற்பத்தியாகும்போது, அதனையும் சேர்த்து பாதிப்பதால் இந்த மாதிரியான வலிகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது என்று ஆராய்ச்சி சொல்கிறது.
போதிய உடற்பயிற்சிகள் இல்லாதிருப்பது மற்றும் மிகுந்த மன அழுத்தத்தில் வாழ்க்கை நடத்தும் பெற்றோர்கள் தங்களின் வலிகளை தங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். இந்த மாதிரியான வலிகளைக் கொண்ட பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான செயலமைப்பு மரபணுவில் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.