சனி, 30 மே, 2015

கனவுகள்- ஒரு மர்மம்



நம் உடலில் நிகழும் பல விடைதேறி
யா நிகழ்வுகளில் கனவுகளும் ஒன்று.அனைவருக்கும் கனவுகள் வருமா, கனவுகள் ஏண் வருகின்றன, அதற்கு அர்த்தங்கள் இருக்குமா,? கனவுகளை கட்டுபடுத முடியுமா ?
அறிந்து கொள்வோம்.

மனித உடல் தூங்கும்போது நான்கு நிலைகள் சுழற்சியாக மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. முதல் மூன்று நிலைகளில் நமது உடல் வெப்பநிலை குறைந்து, ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு குறைத்து ஆழ் நிலை ஊரகதிற்கு செல்லும்.இந்த நிலைகளில் நம் உடலின் வளர்சிதை மாற்றம் குறைந்து உடலின் பெரும்பலன் பாகங்கள் ஓய்வில் இருக்கும்.

இட்ந்த மூன்று நிலைகளிலும் நம் விழி அசைவற்ற ஊரகதில் இருப்போம்(NREM – Non Rapid Eye Movement ). நான்காவது நிலையை அடையும் பொது நம் விழிகளில் அசைவு இருக்கும். (REM -Rapid Eye movement) .இந்த நிலை 20 நிமிடங்கள் வரை நீடிக்கும். நிலையில் தான் நமக்கு கனவுகள் வருகின்றன. நாம் மோத துக்காதில் 25% மேலாக நாம் ஆர்‌இ‌எம் (REM)நிலையில் கழிக்கிறோம்.இந்த நான்கு நிலைகளும் மாறி மாறி தொடர்ச்சியாக நம் கண்விழிக்கும் வரை வந்து கொண்டே இருக்கும்.

நாம் அனைவரும் கனவு காண்கிறோம்.சிலர் இதை மறுத்தாலும் அது தான் உண்மை.ஆனால் கனவுகளை நமது மூளை உடனே நமது ஞாபகதிலிருந்து நீக்கி விடுகிறது.நாம் விழிக்கும் நேரத்தில் கண்ட கனவு மட்டுமே நமக்கு ஞாபகம் இருக்கும். அதாவது 95% கனவுகள் நமக்கு விழிக்கும் முன்பே மறந்துவிடுகின்றன.

உங்களுக்கு தெரியுமா?

நமது வாழ்நாளி ல் 6% கனவிலயே கழிக்கிகிறோம்

குழந்தைகளும் கனவு காண்கின்றன. அவைகளுக்கு மொழி தெரியாததால் அவர்களின் கனவுகள் வெறும் ஊமை படம் போன்று மொழி பரிமாற்றம் அற்ற கனவுகளாக தோன்றும். குழந்தைகள் பெரியவர்களை போன்று இரண்டு மடங்கு நேரத்தை நான்காம் நிலை உறக்கதில் ( REM in total sleep- 50% ) கழிக்கின்றன.

அதேபோல் மூன்று வயதிற்கு முன்பே பார்வை இழந்த, பிறவியிலயே பார்வை அற்றவர்களும் கனவு காண்கின்றன.அவர்களின் கனவுகளில் ஒலி,சுவை, ஸ்பரிசம், மணம் போன்ற மற்ற நான்கு புலன்கள் தொடர்புடைய கனவுகள் தோன்றும்.

உங்களுக்கு தெரியுமா?

சில விலங்குகள் கூட கனவு காண்கின்றன.

கனவு காணும் பொது நமது உடல் முழுவதும் (விழி திரை தவிர்த்து) செயலாற்ற நிலையில் (paralysis) இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?, அதனால் தான் நம்மை கனவில் நம்மை யாராவது துரதினாலும் நிஜத்தில் நமது உடல் ஓடுவதில்லை.இந்த கட்டுபாடு இல்லை என்றால் என்ன ஆகும் என்று சிந்தித்து கொள்ளுங்கள்.

இரத்ததில் சர்க்கரையின் அளவு

Glucose-and-Insulin-Flow-in-the-Body

இரத்ததில் சர்க்கரையின் அளவு

நமது உணவில் உள்ள சர்க்கரையானது வளர்சிதை மாற்றத்தின் (metabolism) வாயிலாக குளுகோசாக மாற்றம் பெற்று இரத்தத்தோடு கலக்கிறது. இதனை அளப்பதற்குப் பொதுவாக நொதிகள் (enzymes) எனப்படும் வேதியியல் பொருள்கள் (chemicals) பயன்படுத்தப் படுகின்றன. குளுகோஸ் ஆக்சிடேஸ் மற்றும் குளுகோஸ் பெராக்சைட் எனப்படும் நொதிகள் குளுகோசை குளுகோனிக் அமிலமாகவும் ஹைட்ரஜன் பெராக்சைட் ஆகவும் மாற்றுகின்றன; இதன் விளைவாக சிகப்பு வண்ணப் பொருள் ஒன்று உற்பத்தி செய்யப்படுவதோடு, இவ்வண்ணத்தின் அடர்த்தியும் கருவி ஒன்றினால் அளக்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு குறிப்பிட்ட அடர்த்தியுள்ள குளுகோஸ் மாதிரியும் (sample) செலுத்தப்படுகிறது. இந்த இரண்டு மாதிரிகளின் அளவைக் கொண்டு இரத்ததில் உள்ள குளுகோசின் அளவு கணக்கிடப்படுகிறது. சாதாரணமாக இரத்ததில் குளுகோசின் அளவு 60-100 mg% இருக்க வேண்டும்.

மார்பக புற்றுநோயை கண்டறிய சுய பரிசோதனை செய்வது எப்படி?



மார்பகபுற்றுநோய் என்பது மார்பக திசுக்களில் வளர்கின்ற ஒருவிதமான கட்டி. அவை அக்குளில் இருக்கும் நிணநீர் கட்டிகளுக்கும் உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவக்கூடிய தன்மை உடையதாகும். பொதுவாக மார்பகங்களில் நாளம் மற்றும் பால் சுரப்பு பகுதியில் தான் இந்த கட்டி வரும். மார்பக சுய பரிசோதனை மூலம் மார்பக புற்றுநோயினை ஆரம்பத்திலேயே கண்டறியலாம். மார்பக பிரச்னைகள் எந்த வயதிலும் ஏற்படலாம் என்பதால் அனைத்து வயது பெண்களும் சுய பரிசோதனையை அவசியம் செய்ய வேண்டும்.

மார்பக சுய பரிசோதனை செய்வது எப்படி?

மேலாடையை நீக்கிவிட்டு நிலைக்கண்ணாடி முன்பு கைகளை பக்கவாட்டில் தொங்கவிட்டபடி நிற்க வேண்டும். கைகளை இடுப்பில் வைத்து கொள்ளவும். மார்பகங்களில் ஏதேனும் தடிப்பு, கட்டி அல்லது இருபக்க மார்பகங்களின் அளவுகளின் மாற்றம், மார்பக காம்புகள் உள் அடங்கி போய்விடுதல், நிறமாற்றம், மார்பக காம்புகளின் ரத்தக்கசிவு உள்ளதா என்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.


அடுத்து, நிலைக்கண்ணாடி முன்பு கைகளை மேலே தூக்கியபடி நிற்கவும். மேற்கூறியபடி உன்னிப்பாக கவனிக்கவும். மார்பகத்தின் அடிப்புறத்தை பரிசோதனை செய்யவும். குறிப்பாக பருத்த மார்பகங்களாக இருந்தால் ஒரு புறம் திரும்பி நின்று இந்த பரிசோதனையை மேற்கொள்ளவும். இதையடுத்து, மல்லாந்து படுத்தபடி முதுகில் ஒரு தலையணையை வைத்து கைகளை தலையின் பின்புறம் வைத்து படுத்து கொள்ளவும். கைகளால் மெதுவாக மார்பகங்களை தடவி பரிசோதனை செய்யவும். சக்கர முறையில் வட்டமாக மார்புகளை உள்ளங்கையால் தேய்த்தபடி அக்குள் வரை மெதுவாக பரிசோதனை செய்யவும்.

மார்பு காம்புகளை நீவி அல்லது இழுத்து திரவம் ஏதேனும் வெளிப்படுகிறதா என்று பரிசோதனை செய்யவும். இந்த பரிசோதனைகளை மாதம்தோறும் செய்ய வேண்டும். மாதவிடாய் காலத்திற்கு பிறகு செய்வது நல்லது. இந்த சமயங்களில் மார்பகம் மிருதுவாக இருப்பதால் கட்டிகள் இருப்பின் அவற்றை சுலபமாக உணரலாம். மாதவிடாய் நின்ற பெண்கள், ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளவர்கள், கருப்பை நீக்கப்பெற்ற பெண்கள் ஆகியோர் மார்பக சுய பரிசோதனைக்கு வசதியான நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக, மாதத்தின் முதல் நாளில் இதை மேற்கொள்ளலாம்.


பரிசோதனையின் போது மார்பகங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பதை உணர்ந்தாலோ, உங்கள் இரத்த சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு மார்பக புற்றுநோய் இருந்தாலோ ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையங்களை அணுகி, உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும். மருத்துவரால் மார்பக பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் முழுமையாக குணமாக்கலாம்.

ஞாயிறு, 24 மே, 2015

மன அழுத்தம்


குடும்பம், குழந்தை, வேலை, பொறுப்பு, பொருளாதாரச் சிக்கல் போன்ற பல பிரச்னைகள் பல கோணங்களிலிருந்து நம்மைத் துரத்துகின்றன. பெட்ரோல் இல்லாத வண்டியைப் போலவும், பேலன்ஸ் இல்லாத மொபைல் போன் போலவும் நம்மை மாற்றிவிடுகின்றன. இந்த 10 கட்டளைகளைக் கடைப்பிடித்தால் பறந்துவிடும் மன அழுத்தம்.
உங்களால் மட்டுமே மகிழ்ச்சியை உருவாக்க முடியும். அது எந்த வகையில், எப்படி என்கிற விடையும் உங்களுக்குத் தெரியும். விளையாட்டு, பயணம், ஒவியம், இசை, தோட்டம், வாசிப்பு, குழந்தைகள் என, எதில் உங்கள் மகிழ்ச்சியின் சாவி மறைந்து உள்ளது எனக் கண்டுபிடியுங்கள்.
செய்யும் வேலை, தங்கியிருக்கும் வீடு, உடன் வாழ்பவர்கள், எதிர்கொள்ளும் நபர்களை முதலில் புரிந்துகொண்டு, நல்ல சூழலை உருவாக்கிட முயற்சி எடுங்கள். எதிர்மறை சிந்தனையாளர்களைத் திருத்துவது, உங்களின் வேலை இல்லை. விரும்பத்தகாத சூழலையும் நபர்களையும் விட்டு விலகுவது, பல விதங்களில் நன்மைகளைத் தரும்.
மறதி, சில நேரங்களில் நல்லது. உங்களின் பிரச்னையை மறக்க, மறதிக்கு அனுமதி கொடுங்கள். பிரச்னைகளை நினைத்து, அடிக்கடி சிந்தித்தால், அவை வலுப்பெறும். பிரச்னைக்கான தீர்வுகளை அலசுவதே புத்திசாலித்தனம்.
மாறுபட்ட சிந்தனைகளும், விசாலமான இதயமும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் முன்பு, நம்மிடம் உள்ளதா எனச் சரிபார்த்து, திருத்திக்கொள்ளுங்கள்.
உங்களை அழுத்தும் சூழலையும் நபர்களையும் சகிப்புத்தன்மைகொண்டு விரட்டலாம். முடியாத பட்சத்தில், சிரிப்பு, புன்னகை, தைரியம், பொறுமை, தன்னம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள், அறிவு போன்ற மகத்தான ஆயுதங்களைக் கொண்டு, அந்த சூழலை வீழ்த்தலாம்.
இலக்கை எட்டும் பயணத்தில் வெற்றி, தோல்வி இரண்டையும் சந்திக்க நேரிடும். இதில், தோல்வியைக் கண்டு துவண்டுபோகாமல், அடுத்து வரப்போவது மாபெரும் வெற்றி என்ற நேர்மறை எண்ணத்தை மனதில் விதையுங்கள்.
மனதை லேசாக்க வேடிக்கையான வீடியோக்களைப் பாருங்கள். நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பாருங்கள். நேசிக்கும் மனிதர்களோடு நேரத்தைச் செலவழியுங்கள். பிடித்தமான உணவை ரசித்து ருசிக்கையில், மகிழ்ச்சி தரும் உணர்வுகள் உருவாகும். மணம் கமழும் நறுமணங்கள் நிறைந்த சூழலில் சில மணி நேரம் செலவழியுங்கள். அடிக்கடி பயணம் செய்யுங்கள்.
எந்த நேரத்திலும் தாழ்வு மனப்பான்மை, தேவையற்ற சிந்தனை, குழப்பம், கோபம், எரிச்சல், பயம், குற்றஉணர்ச்சி, சந்தேகம் போன்ற சிந்தனைகளை உங்களுக்குள் தோன்ற அனுமதிக்காதீர். நிறைய உடற்பயிற்சி செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் விளையாடுங்கள்.
தனிமையை இனிமையாக்குவது, சோகத்தைச் சுகமாக்குவது, பயத்தை எதிர்கொள்வது போன்ற வற்றுக்கு, தன்னம்பிக்கைதான் மூலாதாரம். உங்களால் எதையும் செய்ய முடியும், செயல்படுத்த முடியும், மாற்ற முடியும் என்பதை முதலில் நம்புங்கள். அதற்கான முயற்சிகளை எடுங்கள்.

எளிமையாகச் செரிக்கக்கூடிய உணவுகளுக்கு முன்னுரிமை தரலாம். எந்த உணவைத் தின்றாலும் நன்கு மென்று தின்னும் பழக்கத்தால், ஹார்மோன்கள், நொதிகள், உள்ளுறுப்புகளின் வேலை சுலபமாகும். ஆதலால், எதிர்வினைகளான டென்ஷன், பதற்றம், கோபம், எரிச்சல் உணர்வு, மன அழுத்தம் போன்றவை வராமல் தவிர்க்கலாம்.

கோமா… மீள்வது சாத்தியமே!

கோமா என்றால் நினைவு இழத்தல் என்பதும், மூளைச்சாவு என்றால் மூளை மரணம் அடைந்துவிட்டது என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், கோமா எதனால் ஏற்படுகிறது, கோமாவுக்கும் மூளைச்சாவுக்கும் உள்ள வேறுபாடு என்ன, கோமா வந்தவர்களுக்கு மூளைச்சாவு வருமா, கோமா வந்தவர்களுக்கு எப்போது திரும்பவும் நினைவு வரும், என்பதில் நிறைய சந்தேகங்கள் உண்டு.
கோமா என்றால் என்ன?
நமது மூளை சுயநினைவுடன் செயல்பட உதவுவது மூளைப் பகுதியில் இருக்கும் ரெட்டிக்குலார் ஆக்டிவேட்டிங் சிஸ்டம் (Reticular activating system) மூளைத்தண்டுவடம், ஹைப்போதாலமஸ் ஆகிய பகுதிகளில் ஏதேனும் தற்காலிகமான பாதிப்பு ஏற்பட்டால், மூளையின் ‘ரெட்டிக்குலார் ஆக்டிவேட்டிங் சிஸ்டம்’ (RAS) பாதிக்கப்படும். இந்த ஆர்.ஏ.எஸ் பகுதியில் இருக்கும் நரம்புகள் தான் சுயநினைவுக்குக் காரணமாக இருக்கின்றன. பாதிக்கப்படும் அளவைப் பொறுத்து நினைவு இழக்கும் நிலை ஏற்பட்டு மயக்கமடைவார்கள். இந்த சமயங்களில் சுயநினைவுக்குக் காரணமான நியூரான்கள் சரியாக வேலை செய்யாமல், மூளைக்குச் சற்று குறைவாக ரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்லும். இது, தற்காலிகமானதுதான். எதனால் ஆர்.ஏ.எஸ் பாதிக்கப்பட்டுள்ளது எனச் சரியாகக் கண்டறிந்து, பாதிப்புக்குக் காரணமான காரணியைச் சரிசெய்தால், கோமாவில் இருந்து மீள முடியும். அதுவரை, அவர்கள் படுத்த படுக்கையாக மட்டுமே இருக்க முடியும்.
ஏன் ஏற்படுகிறது?
தலையில் அடிபட்டு மூளை பாதிக்கப்படுவது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு அல்லது விரிசல் ஏற்படுவது, மூளையில் கட்டிகள் வளருவது, உடலில் வேறு பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய், மூளையைப் பாதிப்பது, அதிக அளவு கதிர்வீச்சால் பாதிக்கப்படுவது, தூக்க மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களால், மூளை நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கோமா ஏற்படலாம். இதுதவிர, மூளையில் ஏற்படும் அதிக அழுத்தமும் கோமாவை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் அதிக வேலை, மன அழுத்தம் காரணமாக ஏற்படும் உயர் ரத்த அழுத்தமும் மூளையைப் பாதிக்கும்.
கோமா ஸ்கோர் அளவைக் கணித்து, தேவையான சிகிச்சை கொடுக்க முடியும். பொதுவாக, மூளைக்கு மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் ரத்தம் செல்லவில்லை எனில், மூளை மற்றும் மூளைத்தண்டு நிரந்தரமாகச் செயல் இழந்து, மீள முடியாத நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்க, மாரடைப்பு, ஸ்ட்ரோக் மற்றும் விபத்தில் அடிபட நேர்ந்தால், விரைவில் மருத்துவமனையை நாடி, செயற்கை முறையில் ஆக்சிஜன் அளிக்க வேண்டும்.
கோமாவில், சுய நினைவு தவறுமே தவிர, உடனடியாக மரணம் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. கண் திறப்பது, பேசுவது, சொன்ன செயலைச் செய்வது ஆகியவற்றைப் பொருத்து, கோமாவில் எந்த நிலையில் உள்ளார் என மதிப்பிடப்படும்.
கோமாவில் இருந்து ஒருவர் முழுமையாக மீள வழி உண்டா?
நிச்சயமாக மீள முடியும். கோமா ஸ்கோர் அளவைப் பொருத்தும், அளிக்கும் சிகிச்சையைப் பொருத்தும் கோமாவில் இருந்து முழுமையாக மீள முடியும். ஒருவர் ஒருமுறை கோமாவில் இருந்து மீண்ட பிறகு, மீண்டும் அவருக்கு கோமா ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு. எனினும், கோமா ஏற்பட்ட காரணம் கண்டறிந்து, விழிப்புடன் இருக்க வேண்டும்.
மூளைச்சாவு எப்படி ஏற்படுகிறது?
விபத்து, கட்டி என மூளையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக மூளைத்தண்டுவடம் நிரந்தரமாக செயல் இழந்துவிடும். செயற்கை சுவாசம் அளிப்பதன் காரணமாக, இதயம் சிறிது நேரம் செயல்படும் நிலையைத்தான் மூளைச்சாவு என்கிறோம். மூளைச்சாவும் மரணம் அடைவது போன்றதுதான். மூளைத்தண்டுவடம் பகுதியில்தான் மெடுலா ஆப்லங்கேட்டாவும் இருக்கிறது. மெடுலா ஆப்லங்கேட்டா, 2 செமீ அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும். இதயத்துடிப்பும், மூச்சு விடுதலும் சீராக இயங்க, இதுதான் காரணம். மூளைத்தண்டுவடத்தில் கட்டி ஏற்பட்டாலோ, மெடுலா ஆப்லங்கேட்டாவில் அடிபட்டாலோ, சில சமயம் மூளை உடனடியாகச் செயல் இழந்துவிடும். சில நிமிடங்களில் இதயமும் செயல் இழக்கும். அதே சமயம், மூளைச்சாவு அடைந்தவர்களுக்கு விரைவாக செயற்கை முறையில் ஆக்சிஜன் கருவியைப் பொருத்தினால், இதயத் துடிப்பு மேலும் 12-24 மணிநேரம் சீராக இயங்கும். வெகு சிலருக்கு, அரிதாக ஒரு வாரம் வரைகூட இதயத்துடிப்பு இருக்கும். ஆனால், செயற்கை ஆக்சிஜனை எடுத்துவிட்டால், இதயத்துடிப்பு நின்றுவிடும். இந்த சூழ்நிலையில்தான், நோயாளியின் குடும்பத்தினரின் அனுமதி பெற்று, சீராக இயங்கும் மற்ற உறுப்புக்களைத் தானமாகப் பெற்று மற்றறவர்களுக்குப் பொருத்தப்படுகிறது.
கோமாவுக்கும், மூளைச்சாவுக்கும் என்ன வித்தியாசம்?
கோமா என்பது நினைவு இழத்தல். அதில் இருந்து மீண்டுவர முடியும். உடனடி மரணம் கிடையாது. சிகிச்சைக்குப் பிறகு நினைவு திரும்ப வாய்ப்புகள் அதிகம். நினைவு திரும்பாமல் உயிர் இழக்கவும்கூடும். ஆனால், மூளைச்சாவு அடைந்துவிட்டால் அதற்கு சிகிச்சை இல்லை.
சாலை விதிகளைப் பின்பற்றுவதாலும், ஹெல்மெட் அணிந்து செல்வதாலும், விபத்தில் தலையில் அடிபடுவதைத் தடுக்க முடியும். ஓய்வு எடுக்காமல் சிந்தித்துக்கொண்டே இருப்பதால், மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதனைத் தவிர்க்க, தியானம் செய்வது நல்லது. அடிக்கடி தலைவலி, வாந்தி, மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட்டால், மூளையில் கட்டி இருக்க வாய்ப்பு உண்டு. மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
மூளைச்சாவு எப்படி உறுதி செய்யப்படுகிறது?
ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்ட நிலையில், அந்த மருத்துவமனையில் உள்ள பொது மருத்துவர், நரம்பியல் மருத்துவர், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் முன்னிலையில் ‘ஆப்னியா’ பரிசோதனை செய்யப்படும். இந்தப் பரிசோதனையின்போது, ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு அளவுகள் கணக்கிடப்படுகின்றன. அதன் பின்னர், செயற்கை சுவாசத்தைத் தற்காலிகமாக நிறுத்தி, அவரால் மூச்சுவிட முடிகிறதா என, மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் பரிசோதிக்கப்படும். தொடர்ச்சியாக மூச்சுவிட முடியவில்லை, இதயத் துடிப்பு குறைகிறது, ரத்த அழுத்தம் மாறுகிறது என்றால், உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்படும். மூச்சு விடவில்லை என்றாலோ, மூச்சு விடுவதற்கான அறிகுறியே இல்லை என்றாலோ, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ரத்தத்தில் கார்பன்டை ஆக்சைடு அளவு பரிசோதிக்கப்படும். கார்பன்டை ஆக்சைடு அளவு  50-ஐத் தாண்டினால் ‘ஆப்னியா’ பரிசோதனை பாசிட்டிவ் எனக் குறித்துக்கொள்வார்கள். பெரியவர்கள் எனில், மீண்டும் ஆறு மணி நேரம் கழித்தும், குழந்தைகள் எனில் வயதைப் பொறுத்து 12-24 மணிநேரங்கள் கழித்தும் மறுபடியும் பரிசோதனை செய்யப்படும். அப்போதும் ‘ஆப்னியா’ பரிசோதனை பாசிட்டிவ் என வந்தால், மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்படும்.
கோமா ஸ்கோர்
கோமா ஸ்கோரைவைத்தே, கோமாவைக் குணப்படுத்தும் நிலையை மருத்துவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.
கண்களைத் திறந்து பார்ப்பது
கோமாவில் இருப்பவர் கண்களைத் திறந்து பார்த்தால், நான்கு மதிப்பெண்கள். கூப்பிடும்போது மட்டுமே பார்த்தால், மூன்று மதிப்பெண்கள். உடலில் எங்கேனும் கிள்ளுதல் அல்லது வலி கொடுத்தலின்போது கண்களைத் திறந்து பார்த்தால், இரண்டு மதிப்பெண்கள். என்ன செய்தாலும் கண்களைத் திறக்கவே இல்லை எனில்,  ஒரு மதிப்பெண்.
பேசுவது
கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொன்னால், ஐந்து மதிப்பெண்கள். கேட்ட கேள்விக்கு, சம்பந்தமே இல்லாமல் பதில் அளித்தால், நான்கு மதிப்பெண்கள், பேசவில்லை வார்த்தைகள் மட்டும் ஒன்றிரண்டாக வருகிறது எனில், மூன்று மதிப்பெண்கள், ஏதேனும் உடலில் வலி ஏற்படுத்தினால் மட்டும் சத்தம் வருகிறது எனில், இரண்டு மதிப்பெண்கள். எந்த சத்தமும் வரவில்லை எனில், ஒரு மதிப்பெண்.
சொன்ன செயலை செய்வது
மருத்துவர் சொல்வதைக் கேட்டறிந்து, சரியாகப் பின்பற்றினால், ஆறு மதிப்பெண்கள். சொன்ன வேலையைச் சரியாக செய்யவில்லை, ஆனால், மருத்துவர் உடலில் வலி ஏற்படுத்தும்போது மருத்துவரின் கையைத் தட்டிவிட்டால் ஐந்து மதிப்பெண்கள். வலி ஏற்படுத்தும்போது இன்னொரு பக்கமாகத் திரும்புகிறார் எனில், நான்கு மதிப்பெண்கள். வலி கொடுத்ததும் இரண்டு கை விரல்களையும் இறுக்கிக்கொண்டால், மூன்று மதிப்பெண்கள். வலி ஏற்படுத்தும்போது கைகளை நீட்டினால் இரண்டு மதிப்பெண்கள். என்ன செய்தாலும் சலனமற்று எதையுமே செய்யவில்லை என்றால், ஒரு மதிப்பெண்.
மூன்று செயல்களையும் சேர்த்து பதினைந்து மதிப்பெண் என்பது அதிகபட்ச ஸ்கோர். மூன்று குறைந்தபட்ச ஸ்கோர். கோமா ஸ்கோர் 12-க்கு மேல் எனில், சிகிச்சை மூலம் மிக விரைவில் நினைவு திரும்ப வாய்ப்பு உண்டு. ஏழு முதல் 11 வரை எனில், நினைவு திரும்ப சில நாட்கள் ஆகும். நான்கு முதல் ஆறு எனில் நினைவு திரும்ப சில மாதங்கள் ஆகலாம். கோமா ஸ்கோர் மூன்று எனில், நினைவு திரும்புவது மிகவும் கடினம். தொடர் சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்த மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வியாழன், 21 மே, 2015

ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்







ஊறுகாயை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
பலருக்கும் ஊறுகாய் இல்லாமல் உணவு சாப்பிடுவது என்பது கடினமான விடயமாக இருக்கும். அனைவராலும் ருசித்து சாப்பிடப்படும் இந்த ஊறுகாய் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
இரத்த அழுத்தம்
உணவோடு அதிகமாக ஊறுகாயை சேர்த்து சாப்பிடும் போதும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொதுவாக இரத்த கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இதை உணர்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
சிறுநீரக குறைபாடு
ஊறுகாயை அதிகம் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீரகத்தின் வேலை பளு அதிகமாகிறது. இதனால் சிறுநீரகத்தின் செயல்திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது.
புற்றுநோய்
ஊறுகாயின் சுவைக்காகவும், பதப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்க கூடியவை.
புற்றுநோயால் இறந்தவர்களில் 90% க்கும் மேலானவர்கள் தொடர்ச்சியாக அதிகம் ஊறுகாய் சாப்பிட்டு வந்தவர்கள் என்று ஓர் ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.
வயிற்றுப்புண்
அதிகமாக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு முதல் பக்கவிளைவாக வயிற்று புண் ஏற்படும். இந்த வயிற்று புண் நாளடைவில் புற்றுநோயாக மாற வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
குமட்டல்
அதிகமாக உணவு சாப்பிட்ட பின்னர் பலருக்கும் குமட்டல் போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால், இதற்கு ஊறுகாய் தான் காரணம் என்று தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
அதிகமாக சாப்பாட்டோடு சேர்த்து ஊறுகாயும் சாப்பிடும் போது குமட்டல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மன அழுத்தம்
ஊறுகாயை அளவிற்கு அதிகமாய் சாப்பிடுபவர்களுக்கு கோபம் காரணத்தினால் ஏற்படும் மன அழுத்தம் அதிகமாய் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தொற்று நோய்
ஊறுகாய் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மற்றவர்களை விட எளிதாக நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
செரிமான பிரச்சனை
ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
ஊறுகாய் மட்டுமல்ல, எந்த ஒரு உணவையும் அளவிற்கு மீறி அதிகமாக உட்கொண்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

வெள்ளி, 15 மே, 2015

‘ஹச்’தும்மல்…ஆயுசு நூறு?!

பொதுவாக வெளியில் கிளம்பும்போது, யாரேனும் தும்மினால் ‘அபசகுனம்’ என்று, புறப்பட்ட காரியத்தைத் தள்ளிவைப்பார்கள். குழந்தைகள் தும்மினால், 100 வயது வரை வாழ வாழ்த்துவார்கள். இந்த நம்பிக்கைகளைத் தாண்டி, தும்மல் ஏன் வருகிறது? அப்போது உடலில்  என்ன நடக்கிறது?
‘பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருள் உடலில் நுழைந்திருக்கிறது. இதனால் உடலுக்குக் கெடுதல் என்பதைச் சுட்டிக்காட்டும் ஓர் எச்சரிக்கை மணியே தும்மல். காற்றில் உள்ள தூசு, வீட்டுப் பொருட்களில் படர்ந்துள்ள தூசு, தாவரம் மற்றும் விலங்குகளிடம் இருந்து வரும் தூசுகள், போன்ற தேவை இல்லாதவை சுவாசப் பாதையில் நுழையும்போது, மூக்கில் உள்ள ‘ஹிஸ்டாமைன் (Histamine)’ என்ற ரசாயனம் மூளையைத் தூண்டி, தும்மலை ஏற்படுத்துகிறது. உடனே, நுரையீரலானது வேகம் நிறைந்த அழுத்தமான காற்றை வெளிப்படுத்தி, அந்த தூசுகளை வெளியேற்றுகிறது.  
 சிலருக்குக் காலை எழுந்தவுடன் தும்மல் வரும். பிறகு, சூழலுக்கு ஏற்ப, உடல் பழகிக்கொண்டதும் தும்மல் நின்றுவிடும். கோடை, மழை என வெப்ப நிலை மாறும்போது, சிலருக்குத் தும்மல் வரலாம். காற்றில் இருக்கக்கூடிய ஈரப்பசை மாறும்போது, நம் உடல் அதை ஏற்றுக்கொள்ளாமல் தும்மலாக வெளிப்படுத்துகிறது. இது இயல்புதான். ஏ.சி-யில் தொடர்ந்து உட்கார்ந்திருக்கும் நபருக்கு, அலர்ஜி காரணமாகத் தும்மல் வரலாம். அவர்கள் இருக்கும் சூழலை மாற்றினாலே, தும்மல் நின்றுவிடும். தும்மும்போது சளி வந்தால், அவர்களுக்கு உடலில் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.  தொடர் தும்மல் வந்தால் மட்டுமே, நுரையீரல் பிரச்னை, நிமோனியா போன்ற நோயின் அறிகுறியாக இருக்கலாம். குடல்இறக்க அறுவைசிகிச்சை செய்தவர்கள், வயிறு தொடர்பான அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு தும்மும்போது, அறுவைசிகிச்சை செய்த இடத்தில், தையல் பிரிய வாய்ப்பு உண்டு என்பதால், அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தும்மல் வரும்போது, கைக்குட்டை அல்லது துண்டால் மூக்கைப் பொத்திக்கொண்டு தும்முவதே சரியான முறை. இதனால், கிருமிகளும், தொற்றுக்களும் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கப்படும்.

அல்சர்… அலட்சியம் வேண்டாம்!

‘‘டீ, காபி வேண்டாம்… ஸாரி, எனக்கு அல்சர்”  இந்த டயலாக் அடிக்கடி கேட்போம். வாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம் விலைக்கு வாங்கிய நோய்களில் இதுவும் ஒன்று. உணவு செரிப்பதற்காக வயிற்றில் அமிலங்கள் சுரக்கும். இந்த அமிலங்களால் வயிற்றுக்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படாதவாறு, புரதங்களால் உருவாக்கப்பட்ட படிமங்களும் (Layers) இருக்கும். இது இரைப்பையைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும். குடல், இரைப்பை, சிறுகுடல், வாய் போன்ற இடங்களில் புண்கள் ஏற்பட்டு, இந்த படிமங்களைப் பாதிக்கும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.
அல்சர் அறிகுறிகள்!
அல்சர் புண்களில் 30-40 சதவிகிதம் அறிகுறிகளே தெரியாது. அடிக்கடி பசி, சாப்பிட்ட பிறகும் பசி, வயிற்று வலி, முதுகு வலி, வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல், சாப்பிட்டதும் வாந்தி போன்ற பிரச்னைகள் இருக்கும். பால், தண்ணீர், பிஸ்கட் போன்ற உணவுகளைச் சாப்பிட்டதும், வயிற்று வலி குறைந்தது போன்ற உணர்வைத் தந்தால், அது முதல் கட்ட அல்சர்.  சிறிது உணவைச் சாப்பிட்ட பிறகும் வயிற்று வலி தொடர்ந்தால், அல்சர் தீவிரமாகி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
அல்சர் வரக் காரணங்கள்!
சமச்சீர் உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிக மசாலா, எண்ணெய் உணவுகள், உணவுப் பழக்கத்தில் மாற்றம், காலை உணவத் தவிர்த்தல், ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter pylori) என்ற கிருமித் தொற்று, மனப் பிரச்னையால் அமிலங்கள் சுரப்பதில் மாற்றங்கள், வீரியமுள்ள வலி மாத்திரைகள், ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்வது, மது மற்றும் புகைப்பழக்கமும் அல்சரை ஏற்படுத்தும். 70 சதவிகித உணவு மற்றும் வாழ்வியல் தவறுகளால்தான் அல்சர் ஏற்படுகிறது.

ரிஸ்க் அல்சர்
வயிற்றுப் புண்ணுக்கு நீண்ட காலம் சிகிச்சை எடுக்காமல் இருந்தால், அது லிப்போமா (lymphoma) என்ற புற்றுநோயாக மாற வாய்ப்புகள் அதிகம். என்றோ ஒரு நாளைக்கு அதிகளவில் மது அருந்த, அவர்களுக்கும் அல்சர் வரும். வாந்தி, வாயு பிரச்னைகளைக் கொண்டுவந்து, அல்சர் நோயைத் தீவிரமாக்கிவிடும்.
நீண்ட காலம் அல்சர் இருந்தால், அந்தப் புண்களின் வடுக்களும் இருக்கும். இது குடலில் ஓட்டை விழும் அளவுக்குக் கொண்டுவந்து, குடல் அடைப்பை ஏற்படுத்தலாம். ரத்தக் குழாய்களை அரித்து, பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இதற்கான காரணங்களை முறையாகக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு, அல்சரை குணமாக்கிவிடலாம்.
உணவின் மூலம் அல்சரைத் தடுக்கலாம்!
நம் தென் இந்திய உணவுகள் ‘நல்ல உணவு’ பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த உணவைச் சாப்பிட்டாலே, அல்சர் வருவதை வெகுவாகக் குறைக்கலாம். ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு முதல் இடம் தரலாம். எண்ணெய், உப்பு, மசாலா, காரம் இவற்றைக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம். தேன், ப்ரக்கோலி, முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, பால் பொருட்கள், வாழை, அதிக நார்சத்துள்ள உணவுகள் மிகவும் நல்லது. கோலா பானங்கள், சோடா, ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிட்ரஸ் வகை ஆயத்த பழச்சாறுகள், டீ, காபி தவிர்க்கலாம்.

வெள்ளி, 8 மே, 2015

முடி அடர்த்தியாக வளர..............இய‌ற்கை வைத்தியம்,

முடி அடர்த்தியாக வளர.......... பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை பல்வேறு விதமான அலங்காரங்களுக்கு உட்படுத்துகின்றனர். முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது. மேலும் எமது சுழலில் உள்ள தூசு துணிக்கைகள் மற்றும் வளியில் கலந்துள்ள நச்சு வாயுக்கள் போன்றவற்றாலும் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்..........1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும். 2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும். 3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும். 4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும். 5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும். 6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். 7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும். 8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும். 9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும். 10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

உயிர் மூச்சு

இரும்புத் துண்டு ஒன்றைத் திறந்தவெளியில் போட்டு வைத்தால் அது காற்றுப் பட்டுத் துருப்பிடிக்கிறது. காற்றில் உள்ள ஆக்சிஜன் என்ற பிராணவாயுவும், இரும்பும் சேர்வதால் ஏற்படும் இரும்பு ஆக்சைடையே நாம் துரு என்கிறோம். இவ்வாறு ஆக்சிஜனுடன் சேர்வதற்கு `ஆக்சிடேஜன்’ என்று பெயர். இது ரசாயன மாற்றமாகும்.
காற்று என்பது ஒரு கலவைப் பொருள். ஆக்சிஜன், நைட்ரஜன், நீராவி, கரியமில வாயு எனப்படும் கார்பன்-டை-ஆக்சைடு ஆகியவற்றின் கலவையே காற்று. ஆனால் துரு என்பது கூட்டுப் பொருள். இரும்பும், ஆக்சிஜனும் சேர்ந்து புதுப் பொருளே உண்டாகிவிடுகிறது. எனவே இதை ரசாயன மாற்றம் என்கிறோம். செல்களில் இத்தகைய ரசாயன மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. `ஆக்சிடேஷன்’ என்பது செல்களில் ஏற்படும் ரசாயன மாற்றங்களில் முக் கியமானதாகும். நாம் இந்த ஆக்சிடேஷனுக்குத் தேவையான ஆக்சிஜனை நமது மூச்சு மண்டலத்தின் மூலம் பெறுகிறோம்.
செல்களில் ஏற்படும் ரசாயன நிகழ்வுகளில் கார்பன்-டை-ஆக்சைடு உண்டாகிறது. இதை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். மூச்சு மண்டலம் இதற்கு வாய்ப்பாக அமைகிறது.
மனிதனின் உயிர், மூச்சிலே அடங்கியிருக்கிறது என்பது முற்றிலும் உண்மை. நாம் உள்ளே வாங்கும் காற்றிலிருந்து ஆக்சிஜன் ரத்தக் குழாய் வழியாக உடல் முழுவதற்கும் கிடைக்கிறது. வெளியே விடும் மூச்சு மூலம் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறுகிறது. ஒருவரது குரல் வளையைப் பிடித்து நெருக்கி இந்த சுவாச நிகழ்ச்சி நடைபெறுவதைத் தடுத்தால் அவர் சில நிமிடங்களில் இறந்துவிடுவார்.
ஆக்சிஜன் வேண்டும் என்பதற்காக நாம் சுவாசிப்பதாக பொதுவாக எண்ணலாம். ஆனால் உண்மையில் சுவாச நிகழ்ச்சிக்குத் தூண்டுகோல், கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்ற வேண்டிய நிர்ப்பந்தமே.
அது எப்படி என்பதைப் பார்க்கலாம். செல்களில் உற்பத்தியாகும் கார்பன்-டை-ஆக்சைடை ரத்தம் எடுத்துச் செல்கிறது.
கழுத்தின் மேற்புறத்தில் கபாலக் குழியின் அடியில் உள்ளதும், மூளையின் ஒரு பகுதியுமான முகுளத்தின் செல்கள், அசுத்த ரத்தம் பட்டவுடன் தந்திச் செய்தி அனுப்புவதைப் போல நரம்பு மூலம் மார்பைச் சுற்றியுள்ள தசைகளுக்குச் செய்தி அனுப்புகிறது. உடனே அந்தத் தசைகள் சுருங்குகின்றன. அதனால் விலா எலும்புகள் மேலே தூக்கப்படுகின்றன. உதரவிதானம் கீழே இறங்குகிறது. மார்பு எலும்பு முன்னே தள்ளப்படுகிறது.
மொத்தத்தில், மார்பு அறை விசாலமடைந்து, நுரையீரல்கள் விரிகின்றன. காற்று உள்ளே செல்கிறது. பிறகு மார்புத் தசைகள் தளர்கின்றன. விலா எலும்புகள் தாழ்கின்றன. உதரவிதானம் மேலே செல்கிறது. மார்பு எலும்பு பின்னடைகிறது. மார்பு அறை சுருங்குகிறது. இவ்வாறு முறையாக, உட்சுவாச, வெளிச்சுவாச நிகழ்ச்சி நடைபெறுகிறது. கார்பன்-டை-ஆக்சைடு முகுளத்தைத் தூண்டுவதே சுவாசத்துக்குக் காரணம். ஆக்சிஜன் தேவை என்பதால் நாம் மூச்சு விடவில்லை. நமது செல்கள் கார்பன்-டை-ஆக்சைடை உற்பத்தி செய்வதால் நாம் சுவாசிக்கிறோம்.
வழக்கமாக, வயது வந்தோர் இரவும் பகலும் நிமிடம் ஒன்றுக்கு 18 முறை மூச்சை இழுத்து வெளியே விடுவார்கள்.
ஓடி விளையாடும் சிறுவர்கள் ஆழமாகவும், விரைவாகவும் சுவாசிப்பதைக் கண்டிருப்பீர்கள். அதன் காரணம் என்ன தெரியுமா? ஓடும்போது செல்களின் ரசாயன நிகழ்வும் துரிதமாக நடைபெறுகிறது. எனவே அதிகமாக கார்பன்-டை-ஆக்சைடு உற்பத்தியாகிறது. அதனால் முகுளத்தின் செல்கள் அதிகமான தடவைகள் செய்தி அனுப்புகின்றன. எனவே சுவாசத்தின் வேகம் அதிகரிக்கிறது.
வாய் வழியாக சுவாசிப்பது சரியா? அது தவறு. காரணம், அதன் மூலம் தூசும் உள்ளே சென்றுவிடும். ஆனால் அதிகமான மூச்சுக் காற்றுத் தேவைப்படும்போது இயல்பாகவே வாய் வழியாகவும் சுவாசிக்கிறோம்.

மரபியல் (ஜெனிடிக்ஸ்)

ஜெனிடிக்ஸ் என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து தோன்றியதாகும். மரபியலானது உயிரியலின் ஒரு பிரிவாகும். மரபியல் என்பது உயிர்வாழ்
உயிரினங்களின் மரபணுக்கள் இடையிலான வேறுபாடுகள் பற்றி படிக்கும் அறிவியல் துறையாகும்.
மரபணு (ஜீன்) என்பது மரபுப் பண்புகளின் அடிப்படை அலகாகும். மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரையிலான மரபணுக்கள் உள்ளன. இந்த மரபணுக்கள் தான் மரபுரீதியான குணங்களை சந்ததிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. தோலின் நிறம், கண்களின் நிறம், தோற்றம், எண்ண ஓட்டம் போன்ற பரம்பரை குணங்கள் பெற்றோர்கள் மூலமாக சந்ததிக்கு கடத்தப்படுகின்றன. ஆரம்பகாலத்தில் மரபுப்பண்புகள் தொடர்பாக முன்னோர்கள் பெற்றிருந்த அறிவை விவசாயத்திற்கும், கால்நடைகள் வளர்ப்பிற்கும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் கிரகோர் மெண்டல் என்பவர் மரபியலின் அடிப்படை அம்சங்கள், உயிரினங்களின் இயல்புகள் உள்ளிட்டவற்றின் அலகுகளை கண்டறிந்தார். அவற்றிற்கு ஜீன்கள் என பெயரிட்டார். இத்துறையின் வளர்ச்சி தற்போது அதிகளவு உள்ளது. இத்துறை சார்ந்த படிப்புகளில் குரோமோசோம்களின் அமைப்பு, தாவரங்கள் மற்றும்
விலங்குகளின் தோற்றம் உள்ளிட்டவற்றை ஆராயலாம். மேலும் ஆய்வு நிறுவனங்கள், எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு
மரபியல் உதவியுடன் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. விலங்குகளில் செல்வர்க்கம் (குளோனிங்) தொடர்பான ஆய்வுகள் இத்துறையில் நடைபெறுகின்றன.