வியாழன், 26 ஜூன், 2014

நீங்கள் குடிப்பது நல்ல தண்ணீரா ? குடிநீரில் இருக்கிறது குழப்பங்கள் !

குடிப்பதற்கான நல்ல தண்ணீர் எது?

குடிநீருக்கு என சிறப்பு இயல்புகள் உள்ளனவா என்றால், ஆம் என்று தான் சொல்ல வேண்டும்.நாம் குடிக்கும் தண்ணீரில் இரண்டுவித இயல்புகளை பரிசோதனை செய்ய வேண்டும். தண்ணீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருட்களின் அளவு 40 முதல் 60க்குள் இருந்தால் நல்ல தண்ணீர். 51 என இருந்தால், சர்வதேச தரத்திற்கு இணையான குடிநீர் என்று அர்த்தம். 250 வரை இருந்தால் பரவாயில்லை. குடிக்கலாம் என்று சொல்வர். மற்றொன்று ?ஹட்ரஜனின் அளவு (பொட்டன்ஷியல்). 6.5 முதல் 7.5 வரை இருந்தால் அமிலமும், காரமும் அதிகமில்லாத நடுநிலை. 6.5க்கு கீழே இருந்தால் அமிலத்தன்மை உடையது. இத்தகைய தண்ணீரை தொடர்ந்து குடித்தால் அல்சர், வயிற்றுப் புண் ஏற்படும்.

8.5க்கு மேல் இருந்தால் தண்ணீர் காரத்தன்மை உடையது. இதைத் தொடர்ந்து குடித்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகும்.’போர்வெல்’ தண்ணீரில் ‘ப்ளூரைடு’ அதிகமாக இருந்தால், தொடர்ந்து குடிக்கும் போது, பற்கள் மஞ்சளாகும். இரும்பு அதிகமாக இருந்தால் ரத்தஓட்டம் பிரச்னையாகும்.’போர்வெல்’ தண்ணீரை ‘ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ முறையில் சுத்திகரிக்கும் போது, 100 லிட்டர் தண்ணீரில் 30 லிட்டர் நல்ல தண்ணீர் கிடைக்கும். மீதியுள்ள 70 லிட்டர் தண்ணீர் கூடுதல் உப்புடன் பூமிக்குத் தான் செல்லும். இதனால் அப்பகுதியில் உள்ள தண்ணீரில் உப்பின் தன்மை தொடர்ந்து அதிகரிக்கத் தான் செய்யும்.கடைகளில் கிடைக்கும் ‘மினரல் வாட்டரில்’, தண்ணீரில் கரையும் திடப்பொருட்களின் அளவு வெறும் 26 தான். குறைந்தது 46 ஆக இருந்தால் தான், நல்லது. அதேபோல் பி.எச்., அளவும் ஆறுக்கு கீழே உள்ளது. இதனால் வயிறு, குடல்புண் ஏற்படலாம்.

எந்தத் தண்ணீரைத் தான் நம்பி குடிப்பது?

இயற்கை கொடுத்த மழைநீரை ரோட்டில் வீணாக்கி விட்டு, காசு கொடுத்து கண்ட தண்ணீரை வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறோம். மழைநீரை ஐந்து வழிகளில் பிடிக்கலாம். மழை பெய்யும் போது திறந்த வெளியில் குடத்தை வைத்து பிடித்தால் அது சுத்தமான மழைநீர். அதில் கரையக்கூடிய திடப்பொருளின் அளவு 46, பி.எச்., அளவு மிகச்சரியாக 7 ஆக இருக்கும். இதுதான் அமிலம், காரமில்லாத நடுநிலைமை. இதுதான் குடிப்பதற்கு உகந்த தண்ணீர் என்று இயற்கை, நமக்கு மழைநீரை வழங்கிக் கொண்டிருக்கிறது.இரண்டாவது முறை, மொட்டைமாடியில் வழியில் மழைநீரை குழாய் மூலம் கீழ்நிலைத் தொட்டி, பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரிப்பது. இதில் தொட்டியின் பாதியளவு கூழாங்கற்கள், அடுப்புக்கரி, மணல், தேங்காய் சிரட்டை எரித்த கரியை நிரப்ப வேண்டும். மீதிப்பகுதியில் மழைநீர் சேகரமாகும். சுத்திகரிக்கப்பட்ட மழைநீரை கீழ்ப்பகுதியில் உள்ள திருகுகுழாய் மூலம் பாத்திரங்களில் சேகரிக்கலாம். ஏற்கனவே கட்டியுள்ள வீடுகளில், மிகச் சிக்கனமாக இம்முறையில் மழைநீரை சேகரிக்கலாம்.

அடுத்தது வீட்டின் பிறபகுதிகள், நடைபாதையில் சேகரமாகும் மழைநீரை தக்கவைக்க, மழைநீர் சேகரிப்பு பள்ளத்தை தோண்ட வேண்டும். இதில் பாதியளவு ஜல்லிகற்களை கொட்டி, மேற்பகுதியை மூடி காற்று வெளியேற சிறுகுழாயை செருக வேண்டும். மழைநீர் இப்பள்ளத்தில் நிறைந்து, பூமியை நோக்கிச் செல்லும். மழைநீர் நிலத்தடிக்குள் செல்லாத நிலையில் தான், கட்டடங்களில் விரிசல் ஏற்படுகிறது. வீட்டில் விரிசல் இருப்பதற்கு, நிலத்தடி நீர் சேகரிப்பு அவசியம். அதுமட்டுமின்றி, மண் அரிப்பையும் தடுப்பதோடு, ‘போர்வெல்’ நீரின் உப்புத்தன்மையை குறைக்கிறது.

எப்படி பரிசோதிப்பது ?

தண்ணீரில் கரைந்துள்ள திடப்பொருளின் அளவை, ‘டி.டி.எஸ்.,’ மீட்டர் மூலம், ஒருசில வினாடிகளில் கண்டறியலாம். இந்த கருவியின் விலை ஆயிரம் ரூபாய். ஹட்ரஜன் பொட்டன்ஷியல் கண்டறிய ஒரு ‘லிட்மஸ்’ காகிதம் போதும். குடிநீரை காகிதத்தை நனைத்த 30 வினாடிகளில் மஞ்சள், பச்சை இரண்டு நிறத்திற்கு நடுவில் இருந்தால், அளவு சரியாக இருக்கிறது என்று அர்த்தம். நூறு காகிதம் அடங்கிய ‘லிட்மஸ்’ புத்தகம் விலை 100 ரூபாய்.

ஒரு வீட்டுக்கு 10 செ.மீ., மழை

நான்கு பேர் அடங்கிய ஒரு குடும்பத்திற்கு ஓராண்டிற்கு குடிக்க, சமைப்பதற்கு 11ஆயிரம் லிட்டர் மழைநீர் தேவை. மதுரையில் சராசரி மழைஅளவு 86 செ.மீ., ஆயிரம் சதுரடி மொட்டைமாடி இருந்தால், மொத்தம் 10 செ.மீ., மழையே போதும். ஒருமுறை மழை பெய்தால் குறைந்தது 10 மி.மீ., என்று வைத்துக் கொண்டாலும் ஆயிரம் லிட்டர் கிடைத்து விடும். இதில் நேரடியாக வெயில் படாமல் இருந்தால் ஆறுமாதங்கள் வரை பாதுகாக்கலாம். அதன்பின்னும் தண்ணீர் இருந்தால், ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் ‘கெமிக்கல் ப்ளீச்’ கலந்தால் போதும். மீண்டும் குடிக்க பயன்படுத்தலாம். 500 சதுர அடி மொட்டை மாடி இருந்தால் 20 செ.மீ., மழை தான் தேவை. ஒவ்வொரு வீட்டிலும் மிக எளிமையாக மழைநீரை சேமிக்கலாம். குடிதண்ணீருக்காக அரசையோ, தனியாரையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை.

OSCIOTHERAPHY


ஒசியொதெரபி பற்றி ஒரு பார்வை 
‘ஒசியோதெரபி’ என்றால் என்ன?                           
‘ஒசியோ’ என்பது ‘ஓசிலேட்’  / ‘ஆசிலேட்’ என்ற வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டது. ‘ஆசிலேட்’ என்பது “அங்கும் இங்கும் ஒரு சீரான இடைவெளியுடன் அசைந்து கொண்டிருக்கும் ஒரு ‘அசைவு’ அல்லது ‘அலைவு’ இயக்கம் ஆகும். ‘தெரபி’ என்பது அறுவைசிகிச்சை அல்லாத உடல், மனம் சார்ந்த ஒரு சிகிச்சை முறையாகும். நமது உடல் அசைவுகளையும், அதனுள் ஓடும் திரவங்கள், ஆற்றல்களின் இயக்க ஒழுங்கை சீர்படுத்தி முறைபடுத்தும் ஒரு நோய் தீர்க்கும் முறையே ‘ஒசியோதெரபி’ ஆகும். இந்த முறை தனிமனிதனுக்குள் ஒரு தூய்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி; ஆற்றல் அளிக்கும்.

“தனிமனிதனுக்குள் தூண்டப்படும் மாற்றமே; உலகளாவிய பிரச்சனைகளின் தீர்வு!” என்பதே “வான்காந்தமனோவியல் விஞ்ஞான பயிற்சி மையத்தின்” தத்துவமாகும்.

‘ஒசியோதெரபி’ என்பது இயற்க்கையான, இயல்பான இயக்க ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு அனுபவ முறை பயிற்சியாகும். அது அதிர்வு அசைவுகள், சுவாசப் பயிற்சிகள், உடலை தளர்வாகவும், இறுக்கமாகவும் பழக்கும் அசைவுகள், தூண்டுதல் பயிற்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பயிற்சி முறையாகும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் வழிகளும் செயல்முறைவிளக்கமாக உள்ளது.

எதற்காக ‘ஒசியொதெரபி’
மனிதப் பண்புகளை உயர்த்த முயலும் எந்த ஒரு நிகழ்ச்சியும்; மனிதனுக்குள் ஒருங்கிணைத்த மூன்று முக்கிய அங்கங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.

உடல்சார்ந்த நோக்கு: நோய் நொடியில்லாத ஒரு உடல் என்பது அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் அனேக மக்கள் உடல்நலத்தின் முக்கியத்துவத்தை நோய்க்கு இரையான பின்னரே உணர்கிறார்கள். இந்த மனிதன் உடல் அளவிலாவது ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு “ஆரோக்கியமான உடல்” தேவை படுகிறது. இந்த உடல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், புலன் சார்ந்த இன்பங்களை அனுபவிப்பதற்கும் மட்டுமே உள்ளது என்று சொல்வது, இந்த மனித இனத்திற்கே இழைக்கப்பட்ட ஒரு கொடூரமான அவமரியாதையாகும். எண்ணற்ற நோய்நொடிகளால் மனிதஇனம் ஒடுக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில் மிருகங்கள் மனிதர்களைவிட உயர்ந்தே இருக்கின்றன. மிருகங்கள் நோய்வாய்ப்படுவது மிகவும் குறைவான சந்தர்ப்பங்களில் தான். அவை மருந்தகங்களுக்கு செல்கின்றனவா?

மனித உடல் இயக்கத்தை பற்றி சுருக்கமாக ஒரு மேற்பார்வை காண்போம். ‘ஒசியோதெரபி’ பற்றி விளக்கமடைய மனித உடற்கூற்றை சற்று கவனிப்போம்:



அ) மூளை, நரம்பு மண்டலம்:
மூளைதான் நமது தலைமைக் கட்டுபாட்டு மையம். உடலின் அகத்திலும் புறத்திலும் இருந்து வரும் தகவல்களை மூளைக்கு தொடர்ச்சியாக கொண்டு சேர்க்கும் தூதுவனே நரம்பு மண்டலமாகும்.

ஆ) இரத்த நாடி மண்டலம்:
இதயத்தில் இருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும்; அங்கிருந்து இதயத்திற்கும் இரத்தத்தை கொண்டு செல்லும் வெளிமுக, உள்முக இரத்த நாளங்களை கொண்டதே இந்த இரத்த நாடி மண்டலம். இது சுவாசிப்பதற்கும், ஊட்டமளிக்கவும் உதவும். நச்சுப்பொருட்களை வெளியேற்றி உடலை பாதுகாக்கும்.


இ) சுவாச மண்டலம்:
நுரையீரலே பிராணவாயுவின் நுழைவாயில். பிராணவாயுவை இழந்த இரத்தம் கரியமில வாயுவை நுரையீரலின் நுண்குழாய்களில் வெளிசுவாசதிற்க்காக நிரப்பும். உள்சுவாசத்தில் இருந்து பிராணவாயு இரத்தத்தில் நிரம்பும். இந்த கரியமில , பிராண வாயுக்களின் பரிமாற்றம் நுரையீரலின் நுண்குழாய்களில் நடைபெறும்.

ஈ) நிண நீர்மண்டலம்:
நிண நீர்மண்டலம்; உடல் திசுக்களில் இருந்து திரவங்களையும், கழிவுகளையும் வெளியேற்றி இரத்த ஓட்டத்தில் சேர்த்துவிடும். இவ்வேலை நடக்காவிட்டால் உடல் திசுக்கள் நச்சுத்தன்மை அதிகரித்து வீக்கமடைந்துவிடும். நோய் பரவாமல் உடலை பாதுகாக்கவும் நிண நீர்மண்டலம் உதவும். நிண நீருக்கென்று தனியாக குழாய்கள் கிடையாது. நிண நீர் திரவத்தின் ஓட்டம்; ஆழ்ந்த சுவாசம், தசை அசைவு, உடல் அதிர்வுகளை சார்ந்துதான் இருக்கும்.


உ) நாளமில்லா சுரப்பிகள்:
நாளமில்லா சுரப்பிகள்; அதனுள் இருந்து சுரக்கும் பல்வேறுவகையான திரவங்களை இரத்தத்தில் நிரப்பிவிடும். இந்த திரவங்கள் உடல் வளர்ச்சியையும், இனப்பெருக்கத்தையும் சீராக்கும். ஒரு மனிதனின்  உணர்வு நிலைகள் நாளமில்லா சுரப்பிகளால் பாதிக்கப்படும்.

உடல் நோய் தீர்வுகளுக்கு ‘ஓசியோதெரபி’ எப்படி உதவுகிறது?
இந்த நவீன வாழ்க்கை முறை உடல்நிலை அழுத்தத்திற்கும், மன குழப்பங்களுக்கும் , உணர்வுகளின் ஏமாற்றத்திற்கும் நம்மை கொண்டு செல்கின்றன. இவை நமது உடல் இயக்கங்களுக்கு இடையூறு விளைவிக்கின்றன, நாளமில்லா சுரப்பிகள் சமநிலை இழக்கின்றன.
         கவலையினால் உண்டாகும் நோய்களுக்கு வழி வகுக்கின்றன. தாம் எப்படி வாழவேண்டுமோ அந்த இயல்பில் இருந்து வெகுவாக விலகி சுற்றித்திரிகிற மனிதர்களுக்கே உரித்தான; தனித்துவம் வாய்ந்த ஒரு நிலைதான் “நோய்” என்பது. நிரூபணம் செய்யப்பட்ட ‘ஓசியோதெரபியின்’ முறைகள்; இந்த ‘சமநிலையற்ற சீர்கேட்டை” வேரோடு அழித்து, செயல் இழக்கம் செய்து, நம்மை அதிலிருந்து விடுவித்துவிடும். இதனால் நமக்குள்ளேயே இருக்கும் நோய்தீர்க்கும் திறனை நாமே உணர்ந்துகொள்ள முடியும். நமக்குள்ளே இருக்கும் உயிர் சக்திகளை பாதுகாத்துக்கொள்ளவும், பலப்படுத்திக்கொள்ளவும் நமக்கு சக்தி கிடைக்கும். உயிரினங்களின் உயர்ந்த நிலையானது இந்த உடல்; ஆகையால் இந்த உடலியக்கத்தை நீடித்து நிலைக்கச் செய்ய தேவையான எல்லா அறிவும் இந்த உடலின் கட்டுமான அமைப்புக்குள்ளேயே பொதிந்து இருக்கின்றது. இந்த ‘ஒசியோதெரபி’ முறைகளை புரிந்துகொண்டு, பயிற்சிசெய்து அதன் பலன்களை நீங்களே உணரவேண்டியதுதான் உங்களது வேலை.

ஒசியோதெரபியின் பலன்கள்:
இந்த உடலினுள் இருக்கும் சுற்றோட்ட மண்டலத்தை இரண்டு வகையாக பார்க்கலாம். தெளிவாகவும், தூய்மையாகவும், துரிதமாகவும் நீரோட்டத்தின் இயல்பில் ஓடிகொண்டிருக்கும் நீரோடை ஒன்று; மற்றது மந்தமாக, அழுக்கும், சேறும் சேர்ந்து, தேங்கி ஓடிகொண்டிருக்கும் நீரோடை. இந்த மண்டலத்தை சரியான நிலையில் பராமரித்துக்கொள்ள  ஒரு பலமுள்ள ஓட்டம் தூண்டப்படவேண்டும். தவறினால் இது இறுக்கப்பட்டு, தேக்கமடைந்துவிடும். இந்த நிலை இதயம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.
உடற்பயிற்சியும், சுவாசப்பயிற்சியும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உடலின் பல பாகங்களுக்கு கொண்டு சேர்க்கும். உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வெளியேற்றும். இதன் இயல்பான பலன்கள் உயர்ந்த ஆற்றல் நிலையும், சிறந்த ஆரோக்கியமும் ஆகும். ஊட்டச்சத்து தயாரிக்கும் பணியும், கழிவுப்பொருள் நீக்கும் பணியும் ஒவ்வொரு தனி உயிரணுவில் இருந்து துவங்குகிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். உணவு பழக்க வழக்கங்களினாலும், உடற்பயிற்சி பற்றாக்குறையினாலும், சீரற்ற சுவாச முறையினாலும் நாம் நமது உடலின் நுண்குழாய்களில் அடைப்புகள் ஏற்படுத்தி விடக்கூடாது.

ஒசியோ உணவுமுறை:

உடல், மன, உணர்வுகளை சிறந்த நிலையில் பாதுகாப்பதில் நாம் உட்கொள்ளும்  உணவு முறை பெரும்பங்குவகிக்கிறது. அமெரிக்காவின் உணவு, மற்றும் மருந்து சார்ந்த அமைப்பு; பலகோடி ருபாய் முதலீடு செய்து  ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கும் உண்மை என்னவென்றால்; “இயற்கை உணவே மனிதனுக்கு சிறந்த உணவாகும்“ என்பதே. “இயற்கை உணவு” என்றால்; “இயற்கை” நமக்கு அந்த உணவை எந்த நிலையில் அளித்ததோ; அதே நிலையிலோ; அல்லது அந்த நிலை மிகவும் கெடாமல் இருக்கும் பதத்திலோ இருக்கும் உணவேயாகும். உனைவை சமைக்கும்பொழுது; அதனுள் இருக்கும் அமினோமிலமும்(முக்கிய புரதசத்து); மூலக்கூறுகளின் தொடர்பும் மாற்றம் அடைந்துவிடும் ; தானாகவே இருக்கும் இயல்பு குலைந்துவிடும். மிருகங்களுக்கு சமைத்த உணவை அளித்து நடத்தப்பட்ட பலதரப்பட்ட ஆய்வுகள் மிருகங்கள் நோய்வாய்படுவதையும்; அவற்றின் இனபெருக்க ஆற்றல் குறைவதையுமே நிரூபணம் செய்கின்றன.  இதன் தர்க்கவியல் முடிவு என்னவென்றால் நாம் பச்சை காய்கறிகள், பழங்கள் , கொட்டை வகைகள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும். பழங்களுக்குள் உயிர் சக்தி இருப்பதனால்; அதனை முழுமையாக உட்கொள்ளவேண்டும். முக்கியமாக அதன் விதைகள் உயர்தரமான கனிமங்கள், உப்பு வகைகள் , சாம்பரம்(பொட்டாசியம்), உவர்மம்(சோடியம்) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.


நோயின் இன்னொரு மூல காரணம் அசைவ உணவு வகைகள் ஆகும்.
நாம் அசைவ உணவு உட்கொள்வதில் இருக்கும் ஆபத்தை கவனத்திற்கு கொண்டு வரும் நிலையின் துவக்கத்தில் உள்ளோம். அசைவ உணவை  நாம் அறவே தவிர்ப்பதற்கு பல கட்டாய காரனங்கள் உள்ளன.


அ) நம்மை போல் தாவர உண்ணிகளின் குடல்; நமது உடல்பகுதியின் (தலை பகுதி சேர்க்காத) அளவைபோன்று 8 முதல் 12   மடங்கு வரை நீளமாக இருக்கும். இந்த நீளம் செரிமானத்திற்கும், தாவரங்களில் உள்ள ஊட்டசத்தை சாறு பிழிந்து எடுக்கவும் உதவும். மாமிசஉன்னிகளின் குடலோ அதன் உடல்பகுதியின் அளவைபோன்று 3 மடங்கு  நீளமாக இருக்கும். இது அழுகும் சதையை அகற்றவும், கூறுகளாக பிரிக்கவும் உதவும்.

ஆ) நமது உமிழ்நீர் காரத்தன்மையானது, பலவகை நொதிகள்(enzymes) கொண்டது. இவை தாவர உணவில் இருக்கும் சிக்கலான கார்போஹைடரேட்டுகளை செரிமானம் செய்வதற்கு உதவும். ஆனால் மாமிச உன்னிகளின் உமிழ்நீர் அமிலதன்மையுடைது. இது மாமிச உணவு செரிமானத்திற்கு உதவும். மேலும் மாமிசஉன்னிகளுக்கு நம்மை விடவும் பத்து மடங்கு அளவு உவரமிலம்(hydrochloric acid) சுரக்கும். இது மாமிச உணவு துரிதமாக செரிமானம் செய்வதற்கு உதவும்.


இ) மாமிசஉன்னிகளுக்கு அதிக அளவிலான கொழுப்புசத்தை செரிமானம் செய்ய ஆற்றல் உள்ளது. நமது ஈரலுக்கு இந்த கொடூரமான பொருளை சிறிதளவே செரிமானம் செய்ய முடியும். 

ஈ) மிருகங்களிடம் யூரிக் அமிலத்தை(சிறுநீர் அமிலம்) உடைக்கும் நொதி(செரிமானதிற்கு உதவும் பொருள்வகை) உள்ளது. நம்மிடம் அவ்வகை நொதி கிடையாது.
உயிரினங்களின் உயர்ந்த நிலையானது இந்த உடல்; ஆகையால் இந்த உடலியக்கத்தை நீடித்து நிலைக்கச் செய்ய தேவையான எல்லா அறிவும் இந்த உடலின் கட்டுமான அமைப்புக்குள்ளேயே பொதிந்து இருக்கின்றது. நமக்குள் அபிரிமிதமாக கொட்டிக்கிடக்கும் வான்காந்த மனோவியல் சக்தியை நாம் தட்டிகொடுத்து நமது முழு திறனையும் வெளிக்கொணர நாம் கற்றுக்கொள்ளலாம். ஒழுங்கு செய்யபட்ட திருத்தமான ஒசியோதேரபியின் அசைவுகள் உடலில் அதிர்வுகளை ஏற்படுத்தும்

           . சக்திகளின் இயக்க ஒழுங்கை பிரித்தும், சீர்படுத்தியும்; நம் உடலின் முழுமைக்கும் ஒரு சமநிலையை உருவாக்கும். தனித்துவம் வாய்ந்த நமது உடற்பயிற்சிகளின் மூலம் , மனம், உணர்வு, உள்ளுணர்வு நிலைகளை இசைபட உணர்ந்து மிக உயர்ந்தநிலை செயல்பாட்டை உருவாக்க முடியும். பொருட்களுடனும், இயற்கையின் ஆற்றலுடனும் இசைபட வாழ்வதுதான் நமது பரிணாம வளர்ச்சிக்கு மிகமுக்கியமான ஒரு அங்கம்.

************************************************************************************
FUTURIZE GLOBAL COMMUNITY FOUNDATION என்ற ஆதாயம் எதிர்பாராத விஞ்ஞானம் சார்ந்த அமைப்பு இந்த பயிற்சியை வடிவமைத்து அளித்துள்ளது. அதன் கிளை நிறுவனங்கள் மலேசியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருக்கின்றன. மனித இயக்க அறிவியலை, அதை பற்றிய புரிதலை ஒரு ஒழுக்கமாக கொண்டுவரவும்; இதே குறிக்கோளுடன் பொறுப்பாக உழைக்ககூடிய மனித சமுதாயத்தை கொண்ட ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கவும் உழைத்துகொண்டுள்ளது. ஆய்விற்கும், கற்றுக்கொடுக்கவும், சேவை புரியவும் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் இது.  இந்த நிறுவனத்தின் நோக்கம் மனிதனின் முழுதிறனையும் புரிந்துகொள்ளவும்,உணர்ந்துகொள்ளவும் முடிகிற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதும்; உடல் மேலாண்மை அறிவியலை கற்றுகொண்டு; வாழ்வின் மதிப்பையும், தரத்தையும் பாராட்ட தெரிந்த ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதும் ஆகும்.
                                       *************
Article copyright by Master Sega,FUTURIZE GLOBAL COMMUNITY FOUNDATION.
Authorised only to be used by CENTRE FOR PSYCOSMIC SCIENCE KARUR for its program coordination. copyright(c) 2013

“It is the commonest of mistakes to assume that the limit of our power of perception is also the limit of all there is to perceive” – C.W. Leadbeater

 “நாம் புலன்களால் உணர இயன்ற அளவே; உணர்ந்துகொள்வதற்கும்  இருப்பதாக கருதுவது; பொது தவறே”

புதன், 25 ஜூன், 2014

அடிக்கடி மூக்கடைப்பா?


எல்லா வயதினருக்கும் மூக்கடைப்பு என்பது ஜலதோஷம் அலர்ஜி போன்ற சாதாரண காரணங்களால் ஏற்படுகிறது சில முக்கியமான காரணங்களைப் பார்ப்போம்.

ஒரு சிலருக்கு மூக்கினுள் உள்ள "செப்டம்" எலும்பு வளைந்து இருக்கும் இதனால் சுவாசப்பாதையில் எலும்பு குறுக்கிட்டு மூக்கடைப்பு இருக்கும் மூக்கினுள் இருக்கிற அந்த வளைந்த எலும்பை எஸ்.எம்.ஆர். முறையில் முழுவதுமாக அகற்றிவிடுவார்கள் இதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. என்ன... மூக்கு கொஞ்சம் கொள கொளவென்று ஆடிக்கொண்டிருக்கும்.

ஒரு பக்கம் படுத்தால் அந்தப் பக்கமாக மூக்கு சரிந்து இருக்கும் அவ்வளவுதான். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை இப்படி எலும்பை எடுப்பது அவர்களின் எலும்பு வளர்ச்சியையே பாதிக்கும் என்பதால் எஸ்.எம்.ஆர். முறை சிகிச்சை அவர் களுக்குச் செய்யப்படுவது இல்லை.

வளைந்த எலும்பைச் சரிசெய்கிற இன்னொரு முறை... "செப்டோ பியாஸ்டி" இதில் மூக்கு எலும்பு முழுவதையும் அகற்றாமல் எந்தப் பகுதி வளைந்திருக்கிறதோ அந்த இடத்தை மட்டும் மாற்றி நேர்செய்கிறார்கள் மூக்கடைப்புக்கான அடுத்த காரணம் "பாலிப்" என்கிற சதை.

"பாலிப்" என்கிற சதை வளர்ச்சியை "பீல்டுக்ரேப்ஸ்" என்பார்கள். உரித்த திராட்சைப்பழங்களைப் போல... கொத்துக் கொத்தாகத் தோற்றம் அளிப்பதால் இப்படி சொல்கிறார்கள் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:-

மூக்கு ஜவ்வு, மினிக்கஸ் மெம்பரைன் போன்ற பகுதிகளில் அலர்ஜியாலோ, "காளான்" கிருமிகளாலோ இந்தச் சதை வளர்கிறது. இது வளர வளர சைனஸ் அறைகளின் வாசலை அடைக்கிறது. அதனால் சைனஸில் சளி தேங்கி, சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக "பாலிப்" மேலும் பெரிதாக வளரத் துவங்குகிறது.

இப்படி "பாலிப்" சைனஸ் என்று போட்டி போட்டுக்கொண்டு தொல்லை தொடங்கும்போது பேச்சு பாதிக்கப்படும். மூக்கடைத்தபடி பேசுவார்கள். வாயால்தான் சுவாசிக்க வேண்டிவரும். வாசனை டேஸ்ட் பிரச்னைக்கும் ஆளாகிறார்கள். "பாலிப்" குறையைப் போக்குவதன் மூலம் ஆஸ்துமாவில் இருந்தும் இவர்கள் குணமாக வழியிருக்கிறது!

"பாலிப்" வளர்ச்சி உள்ளவர்களுக்கு என்ன சிகிச்சை செய்கிறார்கள். பாலிப்களை மூக்கிலிருந்து பிரித்து எடுப்பதே சிறந்த வழி. இதை பாலிபெக்டமி என்கிறார்கள் அறுவைசிகிச்சை செய்து இந்த பாலிப்களை வேரோடு பறிக்க வேண்டும். இல்லையென்றால் திரும்பத் திரும்ப வளர ஆரம்பிக்கும். சி.டி. ஸ்கேன் மூலம் அதன் வேர்கள் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதைக் கண்டுபிடித்து எண்டோஸ்கோபிக் முறையில் அதை அடியோடு அகற்றுவதே நிரந்தரதீர்வைத் தரும்.

சிலவகை பாலிப்கள் ஆஸ்பர்ஜில்லஸ் என்கிற காளான்களால் ஏற்படுகிறது. இதைக் கவனிக்காமல் விட்டால் இந்தச் சதையானது வளர்ந்து மூளைவரை பாய்ந்துவிடுகிறது. இந்தச் சிக்கலான கட்டத்தில் மிகத் திறமையான அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் மட்டுமே, சரியான முறையில் நோயாளிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் இந்த "பாலிப்"களை அகற்ற முடியும்!

நம்முடைய முகத்தின் ஆபத்தான பகுதி எது தெரியுமா?

மூக்கை ஒட்டி அமைந்துள்ள அந்த முக்கோண ஏரியாதான். ஏராளமான ரத்தக்குழாய்கள் இந்த முக்கோணப் பகுதி வழியாகத்தான் மூளைக்குச் செல்கின்றன. இந்தப் பகுதியில் ஏதேனும் சின்ன ரத்தக்காயமோ புண்ணோ உண்டானால் கூட... அதன் கிருமிகள் உடனடியாக மூளைக்குச் சென்று மரணத்தையே ஏற்படுத்தலாம்.

மூக்கிலும் இதேபோல ஒரு ஆபத்தானபகுதி இருக்கிறது அது மூக்கின் உள்ளே மேல்பகுதி அதாவது மூளையின் அடித்தளத்தை தொட்டபடி செல்கிற சுவாசவழி. இதை ஆபத்தான மூக்குப்பகுதி என்கிறார்கள் எண்டோஸ்கோபிக் ஆபரேஷன்கள் மிக மிக கவனமாக செய்யப்பட வேண்டும். கொஞ்சம் தவறினாலும் மூளைப் பகுதியைத் துளைத்து பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும்.

என்னிடம் ஒரு கல்லூரி மாணவன் வந்தான்... அவனுக்கு மூக்கில் இந்த ஆபத்தான பகுதியில் பாலிப் வளர்ந்திருந்தது. கவனிக்காமலே விட்டதால் பாலிப் பெரிதாக வளர்ந்து இதனால் அவனது இரண்டு கண்களும் அகலத்தில் விலகி திரும்பியிருந்தது. இதுபோல் ஆவதற்கு "தவளைமுகம்" என்கிறோம். அந்த மாணவனுக்கு எண்டோஸ்கோபிக் முறையில் மூக்கில் ஆபரேஷன் செய்து "பாலிப்"பை நீக்கி, கண்கள் சரிசெய்யப்பட்டன.

நமக்குத் தெரிந்த சின்னச் சின்ன விஷயங்களாலும் மூக்கடைப்பு ஏற்பட்டு, பெரிய அளவில் பாதிப்புகள் உண்டாகலாம்

செவ்வாய், 24 ஜூன், 2014

பித்தப்பை கற்கள் ஏன் ? எப்படி- ?

இன்றைக்கு பெரும்பாலானோருக்கு உண்டாகும் நோய்களில் பித்தப்பை கற்களால் உண்டாகும் நோயும் ஒன்று பித்தப்பை கற்கள் ஏற்பட்டு பித்தப்பையையே அகற்றிவிட்டு இருப்பவர்களும் உண்டு. வலது பக்க விலா எலும்புகளுக்கு கீழே வலி உண்டாகும். இந்த வலி ஏற்படுவதற்கு பெரும்பாலும் பித்தப்பையில் உண்டாகும் கற்களே காரணம். பித்தப்பை கற்கள் என்றால் என்ன? ஏன் உண்டாகிறது? அதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
பித்தப்பையில் சிறு சிறு கற்கள் உண்டாகும். கற்கள் மிளகு அளவு உள்ளவனாக இருக்கும். ஒரு சில கற்கள் பெரியவைகளாகவும் இருக்கும். புளியங்கொட்டை அளவிற்கும் கற்கள் உறுவாவது உண்டு. ஒரு சிலருக்கு ஒரே கல் பித்தப்பை முழுவதும் நிரம்பி இருப்பதும் உண்டு.
பித்தப்பையி¢ல் உண்டாகிற கற்கள் ஒரு சில மிருதுவாகவும், ஒரு சில கற்கள் கனமாகவும், கெட்டியாகவும் இருக்கும் சிறிய கற்களாக இருந்தால் அவை ஒன்றோடு ஒன்று உராய்ந்து உருண்டையாகி விடும். இவை உண்டாவதற்கு முக்கியமான காரணம் இன்றைக்கு பெரும்பாலானோருக்கு உண்டாகும் நோய்களில் பித்தப்பை கற்களால் உண்டாகும் நோயும் ஒன்று பித்தப்பை கற்கள் ஏற்பட்டு பித்தப்பையையே அகற்றிவிட்டு இருப்பவர்களும் உண்டு.
வலது பக்க விலா எலும்புகளுக்கு கீழே வலி உண்டாகும். இந்த வலி ஏற்படுவதற்கு பெரும்பாலும் பித்தப்பையில் உண்டாகும் கற்களே காரணம். பித்தப்பை கற்கள் என்றால் என்ன? ஏன் உண்டாகிறது? அதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
பித்தப்பையில் சிறு சிறு கற்கள் உண்டாகும். கற்கள் மிளகு அளவு உள்ளவனாக இருக்கும். ஒரு சில கற்கள் பெரியவைகளாகவும் இருக்கும். புளியங்கொட்டை அளவிற்கும் கற்கள் உறுவாவது உண்டு. ஒரு சிலருக்கு ஒரே கல் பித்தப்பை முழுவதும் நிரம்பி இருப்பதும் உண்டு.
பித்தப்பையி¢ல் உண்டாகிற கற்கள் ஒரு சில மிருதுவாகவும், ஒரு சில கற்கள் கனமாகவும், கெட்டியாகவும் இருக்கும் சிறிய கற்களாக இருந்தால் அவை ஒன்றோடு ஒன்று உராய்ந்து உருண்டையாகி விடும். இவை உண்டாவதற்கு முக்கியமான காரணம் பித்தப்பையில் ஏற்படும் அயற்சி. இந்த அயற்சி ஏற்பட்டவுடன் பித்தநீர் அதிக நேரம் பையில் தங்கி இருகிவிடுகிறது. வேறு காரணங்களாலும் பித்த நீர் தடைப்பட்டு நிற்குமானால் இந்த நோய் உண¢டாகலாம்.
இது போன்று கற்கள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம் உண்டாகின்றன. அதிலும் ஐம்பது முதல் அறுபது வயது உள்ளவர்களுக்கு அதிகமாக உண்டாகிறது. அதிக உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் இந்த கற்கள் உண்டாகலாம். இருதய நோய், கல்லீரல் நோய், பித்தநீர் வடிகுழாயில் நாக்குப் பூச்சிகளாலும் சதைக் கட்டிகளாலும் அடைப்பு உண்டாகப் பித்தம் தங்கி விடுவது போன்றவற்றாலும் இது போன்ற கற்கள் உண்டாகலாம்.
பித்தப்பையில் உண்டாகும் கற்கள் சிறியவைகளாக வெகு காலம் தங்கியிருந்தாலும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும். ஆனால் கற்களால் வலி உண்டாவதற்கு முன்பு சில குறிகள் கவனிப்பவர்களுக்கு தெரியும். உணவு உண்டப்பின் வயிற்றில் கனமாகவும் உப்புசமாகவும் இருக்கும். இவை ஏப்பம் விடுவதாலும் வாந்தி எடுப்பதாலும் குறைந்துவிடும்.
இதுபோல் சில காலம் சென்ற பிறகு திடீரென்று குத்தல் போன்ற வலி உண்டாகும். வலி பொருக்க முடியாமல் முழங்காலை வயிற்றின் மேல் மடக்கி அமுக்கினால் வலி சற்று குறைவது உண்டு பித்தப்பையில் இருக்கும் கற்கள் சில சமயங்களில் அங்கிருந்து சிறு குடலுக்கு வரும் குழாயில் இறங்கி அதனுள் அகப்பட்டு கொண்டால் வலி உண்டாகும்.
இந்த வலி வலது விலாபுறத்தில் மார்புக் கூட்டு எலும்பின் கீழே இருக்கும். அங்கிருந்து வலது தோள்பட்டை முதுகின் வலது பக்கம் இவைகளிலும் இந்த வலி உண்டாகும். கல்லீரல் கனத்துப் பருத்து கையால் தொட்டாலும் இந்த வலியைக் கொடுக்கும். இந்த வலி வரும்போது முகம் சுளித்து கைநாடி வலுக்குறைந்து நெற்றியில் வேர்வை உண்டாகும்.
அதிகமான காய்ச்சலும் உண்டாகும். வாந்தி இருக்கும். அடைத்திருக்கும் கற்கள் நழுவி சிறுகுடலுக்குள் வந்தாலும் அல்லது பித்தப் பைக்குள் திரும்பி சேர்ந்துவிட்டாலும் வலி உடனே நின்று விடும். அடைப்பு நீ¢ங்காவிட்டால் மஞ்சள் காமாலை, வெண்ணிறமும் தூற்நாற்றமும் உள்ள மலம் பிரியும். பித்தம் மற்றும் இரத்தத்தில் கலந்திருக்கும் விஷக் குறிகள் எல்லாம் அடுத்தடுத்து காணப்படும்.
மருத்துவம்:
பித்தப்பை கற்களால் உண்டாகக்கூடிய வலிகளுக்கு இரு வேறு விதங்களில் மருத்துவம் அளிக்கலாம். ஒன்று வலி உள்ளபோது செய்வது, மற்றொன்று வலி இல்லாதக் காலத்தில் செய்வது.
வலி உள்ள போது நோயாளியை வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். இதற்கு உப்பு நீர் மிகவும் உபயோகமானது. வாந்தி எடுப்பதால் பித்தநீர் குழாயின் பிடிப்பு தளர்ந்துவிடும். அரிசிமாவு, ஆளி விதைமாவு, களிமண் இவற்றை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து கிண்டி வலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டலாம், கற்பூரத் தைலம் 5 சொட்டு சாப்பிடக் கொடுக்கலாம்.
வலி நின்ற பிறகு இனி திரும்பாமல் இருப்பதற்கும் கற்கள் உண்டாகமல் இருப்பதற்கும் மருத்துவம் செய்ய வேண்டும். நிலவேம்பு, அழுக்கிரா சூரணம் போன்றவை கொடுக்கலாம். உணவில் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும்.
வலி இல்லாத காலத்தில் நிலவேம் சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா சூரணம் சேர்த்து கொடுத்து வரலாம். பித்தக் கற்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில  மருத்துவரை அணுகி மருத்துவம் செய்துக் கொள்வது நல்லது.

பைல்ஸ் (Piles ) எனப்படும் மூலவியாதியும் அதற்கான காரணிகளும்,





மலக்குடற் குதத்தின் அருகில் ஏற்படும் வீக்கம் மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது. வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும்.

மல வாசலில் நல்ல இரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான இரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன. அசுத்த இரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோயாக இடம் பெறுகிறது.

மூல நோய் இரு வகைப் படும் -உள் மூலம், வெளி மூலம், உள் மூலத்தில் மேல் பகுதி இரத்தக் குழாய்களும் வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி இரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.மூல நோயின் காரணங்களாகப் பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.

1. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் போது அது மூல வீக்கத்தை ஏற்படுத்தி மூல வியாதியைத் தோற்றுவிக்கும். தமிழ் வைத்தியத்தில் “வயது போக, வயிறு பெருக்க, மூலம் புறப்பட” என்ற சூத்திரம் இருக்கிறது.

2. நீண்ட நாள் மலச் சிக்கல் மூலத்தைப் புடைக்கச் செய்கிறது.

3. உடற்பயிற்சி இல்லாமை, நார் சத்து இல்லாத மாவு உணவு, மூல வாசலில் எரிச்சல் என்பனவும் மூல வியாதியைத் தோற்றுவிக்கின்றன.

4. அதிக நேரம் நின்றபடி வேலை செய்தல் அல்லது அதிக நேரம் உட்கார்ந்த படி வேலை செய்தல் மூல நோய்க்குக் காரணமாகின்றது.

5.மூல நோய் பரம்பரை நோயாகவும் சில குடும்பங்களில் இடம் பெறுகிறது.

6. வயதுவ காலத்தில் முதுமையின் பரிசுகளில் ஒன்றாக மூலவியாதியும் ஏற்படுவது வழமை. இதைத் தவிர்க்க முடியும். கட்டாயமாக முதுமை அடைந்த காலத்தில் மூல நோய் ஏற்படத்தான் மேண்டுமென்ற விதி கிடையாது.

7. கர்ப்பிணிகளுக்கு வயிற்றுப் பகுதி அழுத்தம் ஏற்படுகிறது. மகப் பேற்றின் போது குழந்தையை முக்கி வெளியேற்றும் போது மூலம் புறப்படும். ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மூல நோய் மறைந்துவிடும்.

மூலவியாதி வருவதைத் தடுப்பதற்கு சில வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள வெண்டைக்காய் போன்ற வழுவழுப்பான மரக்கறிகளையும் இலை வகை களையும் உணவாக்க வேண்டும். முதலாம் கட்ட மூலவியாதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர இது போதுமானது. நிறையத் தண்ணீர் குடிக்க மறக்கக் கூடாது.

வயதானவர்களுக்கு மூல இரத்தக் குழாய் வீக்கம் கூடுதலாக இருக்கும். பைன்டிங் (Binding ) என்ற சிகிச்சை முறையை மருத்துவ ஆலோசனையுடன் பயன் படுத்தி நன்மை அடையலாம். இந்தக் கட்டம் இரண்டாம் கட்ட மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது.

மூன்றாம் கட்டம் பற்றி இவ்விடத்தில் பார்ப்போம். அறுவை சிகிச்சை தவிர்ந்த பிறிதொரு மருத்துவ முறையும் மூலவியாதியைக் கட்டுப்படுத்த முடியாதென்ற நிலை தோன்றும் போது அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை அப்படியானவர்களுக்கு சிறந்த நிவாரணமாக அமையும். இப்போது சில நிமிடங்களில் முடியும் லேசர் அறுவை சிகிச்சை வந்து விட்டது. அதைப் பயமின்றிப் பயன் படுத்தலாம்.


மலச்சிக்கலை தடுக்கும் வழிமுறை:



மலச்சிக்கல்
மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில் மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம்.

மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.

செரிமானம் எப்படி ஏற்படுகிறது?
முதற்கட்டமான செரிமானம், நம் வாயில் போடும் உணவு நன்கு மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து கிரியை புரியும்போது ஆரம்பமாகிறது. பிறகு உணவு வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது. உணவை நன்கு மெல்லாமல் விழுங்குபவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும்.

வயிற்றிலுள்ள உணவு, அங்குள்ள அமிலங்களுடன் நன்கு கடையப்பட்டு, சிறு குடலுக்குச் செல்கிறது. வயிற்றிலுள்ள அமிலத்தன்மை அதிகமாகும்போது, நமக்கு அசிடிடி அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமானம் பாதிக்கப்படுகிறது.

சிறுகுடலுக்கு வந்த உணவு, அமிலத்தன்மையுடையது. கணையத்திலிருந்து கணைய நீர், கல்லீரலில் இருந்து பித்தநீர் இவை காரத்தன்மையுடையன. இவற்றுடன் சிறுகுடலில் சுரக்கும் பல என்ஸைம்களுடன் கலந்து, உணவு அமிலத்தன்மை இழந்து, நடுநிலை ((நெரவசயட)) அடைகிறது. இங்கு உணவின் சத்துக்கள் உட்கிரகிக்கப்பட்டு சக்கைகள் பெருங்குடலுக்குள் தள்ளப்படுகின்றன.

பெருங்குடலில் இக்கழிவுகளில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு மலமாக வெளியேறுகிறது.

மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்:


1. நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.

3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.

5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.

6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.




மலச்சிக்கலுக்கு அக்குபிரஷர் சிகிச்சை:
அக்குபிரஷர் முறைப்படி நம் உடலின் 12 முக்கியமான உறுப்புகளும் 12 மெரிடியன்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மெரிடியன்களின் வழியே 24 மணி நேரமும் சக்தி பாய்கிறது. ஒவ்வொரு மெரிடியனிலும் 2 மணி நேரம் என 12 மெரிடியன்களில் 24 மணி நேரம் சக்தி பாய்கிறது.

பெருங்குடல் மெரிடியனில் சக்தி பாயும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரையாகும். அதனால், காலை 6 முதல் 7 மணிக்குள் நாம் மலம் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் நல்லது. 1 வாரம் சிறிது பொறுமையுடன் இந்த நேரத்தில் மலம் கழிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். 2 அல்லது 3 டம்ளர் நீர் குடித்து வீட்டினுள்ளேயே சிறிது நேரம் நடக்க வேண்டும். பிறகு முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடும் பயிற்சி செய்ய வேண்டும். இதனால், அடிவயிறு அழுத்தப்பட்டு மலம் கீழுக்குத் தள்ளப்படுகிறது.

வாய்க்குக் கீழே முகவாயில் உள்ள புள்ளியிலும், தொப்புளுக்கு கீழே 2 விரல்கள் தள்ளி உள்ள புள்ளியிலும், பக்கவாட்டில் இருபுறங்களிலும் 3 விரல்கள் தள்ளி உள்ள புள்ளிகளிலும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். டாய்லெட்டில் உட்கார்ந்து கழுத்துப் பயிற்சி செய்தாலும் மலம் இறங்கி வரும். தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் பயிற்சி செய்யும்போது, மலம் கழிப்பது சுலபமாகிறது.





இரைப்பை மெரிடியனில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சக்தி பாய்கிறது. காலை 9 மணிக்கு நாம் முழு உணவு உண்போமேயானால் உணவு நன்கு செரிக்கப்பட்டு மலச்சிக்கல் தீரும். இப்போதுள்ள அவசர யுகத்தில் பலர் காலையில் காபி அல்லது கஞ்சி குடித்துவிட்டு பிறகு மெதுவாக மதியம் உணவு உண்கின்றனர். கேட்டால் ‘நேரம் இல்லை’ என்ற பதில் கிடைக்கிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள ஆள்காட்டி விரலின் கடைசிப் பகுதியில் உள்ள புள்ளி லிமி4 என்ற பெருங்குடல் மெரிடியனில் நான்காவது புள்ளியாகும்.

கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இப்புள்ளி உள்ளது. இடையிலுள்ள சதைப்பகுதியில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசிப் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்புள்ளியை தினமும் காலை 14 முறைகளும், மாலை 14 முறைகளும் அழுத்தம் கொடுத்து விலக்க வேண்டும். இரு கைகளிலும் செய்ய வேண்டும். இதனால் மலச்சிக்கல், அசிடிடி, வாயுத் தொல்லை முதலியவை தீருகின்றன. வராமல் தடுக்கப்படுகின்றன.

மலச்சிக்கலினால் உடல் மந்தம், வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, து}க்கமின்மை, உடல் நாற்றம், மூலம், பௌத்திரம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட கொலைடிஸ், சிறுகுடல் புற்றுநோய் இவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, மலச்சிக்கலை நாம் அலட்சியம் செய்யாமல் அதற்குத் தீர்வு காண வேண்டும்.

நாம் நமது ஆயுளின் முதல்பாதியில் உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறோம். பிற்பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறோம். எல்லோரும் இதை யோசித்து உடல்நலத்தை எப்போதும் பேணிக் காக்க வேண்டும்.

Breast Cancer - மார்பகப் புற்றுநோய்கான காரணிகளும் சிகிச்சைகளும்





மார்பக புற்றுநோய் உருவாகுவதற்கான காரணங்கள்:
உடம்பை கட்டாக வைத்திருக்க பலவித கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் பெண்களுக்கே மார்பக புற்றுநோய் முக்கியமாக ஏற்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


மார்பகப் புற்றுநோய் இன்று எங்கள் நாட்டில் இளம் பெண் களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோயாக உருவெடுத்துள்ளது. மார்பகப் புற்றுநோய் சம்பந்தப்பட்ட பெண்களின் கவனயீனத்தினால் தான் அதிகமாக ஏற்படுகிறதென்று வைத்தியர்கள் கூறுகின்றார்கள்.


எனவே, மார்பகப் புற்று நோய் தொடர்பான அறிவூட்டுவதற்கான செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சு பிரதேச, மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மார்பகப் புற்றுநோயை கண்டு பிடிப்பதற்கு நான்கு வழிகளில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.


புற்றுநோய் இருப்பதை தாமாகவே பரிசோதித்து கண்டு கொள்வது, ஆஸ்பத்திரிகளில் கிளினிக் சிகிச்சைக்கு செல்வதன் மூலம் அடை யாளம் கண்டு கொள்ளல், மெமோகிறாம் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் கண்டு கொள்ள முடியும். இப்பரிசோதனைகள் அரசாங்க ஆஸ்பத்திரி களில் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.


புற்றுநோய் ஏற்படுவதற்கு பிரதான காரணம் பிள்ளைகளை ஈன்றெடுக்கும் தாய்மார்களின் சுயநலம் என்று வைத்தியர்கள் கூறுகின்றார்கள். தாயான பின்னரும் பெண்கள் தங்கள் உடலை கட்டாக வைத்திருந்து கவர்ச்சிகரமான தோற்றத்தை பெறுவதற்காக தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலை ஊட்டுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.


குழந்தை பிறந்த முதல் 10 நாட்களுக்கு தாய்ப் பாலை கொடுத்த பின்னர் சில தாய்மார் தங்கள் குழந்தைகளுக்கு புட்டிப்பாலை பழக்கி புட்டிப்பாலை ஊட்டுவதனால் பெண்களின் மார்பகத்தில் இயற்கையாகவே ஊற்றெடுக்கும் தாய்ப்பால் வெளியேறுவதற்கு இடமின்றி மார்பகங்களிலேயே கண்டிப்போகின்றன.


இதுவும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகும். சில தாய்மார் தங்கள் மார்பகங்களில் தாய்ப்பால் ஊற்றெடுப்பதை தடுப்பதற்கு சில மருந்து மாத்திரைகளை எடுப்பதும் உண்டு. இதனாலும் இவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தோன்றுகின்றன. தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு சுமார் 3 முதல் 4 வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு என்றுமே மார்பக புற்றுநோய் ஏற்படாதென்று புற்றுநோய் வைத்திய நிபுணர் கள் கூறுகிறார்கள்.


தெற்காசிய நாடுகளில் நடத்தப்பட்ட மதிப்பீட்டில் இலங்கையே தாய்ப் பால் ஊட்டுவதில் முன்னிலையில் இருக்கின்றது என்ற உண்மை புலனாகி இருக்கின்றது. இந்தத் தகவலை யுனிசெப் அமைப்பின் விசேட போஷாக்கு நிபுணரான ஜூலியா க்ரெசவெக் தெரிவித் துள்ளார்.


எங்கள் நாட்டில் உள்ள கிராமிய மற்றும் மலையகத்தைச் சேர்ந்த வறுமை நிலையில் உள்ள தாய்மார் இன்றும்கூட தங்கள் உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் பிள்ளைகளுக்கு 5 வயது வரை இயற்கை அன்னை மனித குலத்திற்கு அறிமுகம் செய்த பாலூட்டும் பழக்கத்தை தொடர்ந்தும் கடைப்பிடிக்கிறார்கள். அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை


மார்பகப் புற்றுநோயும் பரிகாரமும்
மார்பகத்தின் அமைப்பு:

ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்பு சதைகளானது. ஒவ்வொரு சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத் தொங்கு சதைகள், சதைகள், சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன.


இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோலா (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்பகத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்பகத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றன.


ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும் வர்ணமற்ற நிணநீர் திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டங் கூட்டமாக அக்குழ்களின் மேலேயும் தோற்பட்டை எலும்புகளின் மேலும் மார்பகங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.

எளிய இயற்க்கை மருத்துவக் குறிப்புகள்


இயற்க்கை நமக்கு அதிகமான வரங்களை அளித்து, அதில் மருத்துவ குணங்களையும் மறைத்து வைத்து உள்ளது.
அவற்றில் சில உங்களுக்காக....

1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.


13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் சுரக்க
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயுத் தொல்லை தீர
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழைத்து ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய் தீர
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.


81) சேற்று புண்ணிற்கு (நீர்சிரங்கு)
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

காசநோய் (சயரோகம், TB) என்றால் என்ன? அதன் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி?

இது மைக்கோ பக்ரீரியம் (Mycobacterium tuberculosis ) எனப்படும் ஒருவகைப் பக்ரீரியாவினால் ஏற்படும் ஒரு தொற்று நோய். இது ஒரு பரம்பரை நோயல்ல. Tuberculosis (TB) எனப்படும் இந் நோய் காற்றின் மூலம் பரவுகின்றது. சுவாசத்தின் மூலம் தொற்றும். இந் நோய்க்கிருமிகள் பெரும்பாலும் சுவாசப்பையில் நோயை ஏற்படுத்துகிறது. 
உலகில் 1/3 பங்கினர் காசநோய்க்கிருமித் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளார்கள். காசநோய்க்கிருமி தொற்றுக்குள்ளான அனைவருக்குமே காசநோய் ஏற்படுவதில்லை. ஆனால் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும் சந்தர்ப்பத்திலேயே அவருக்கு காசநோய் ஏற்படுகிறது.
காசநோயின் அறிகுறிகள்
▪ தொடர்ச்சியாக மூன்று வாரங்களிற்கு மேலான இருமல்.
▪ சளியுடன் இரத்தம் வெளியேறல்
▪ நிணநீர் கணுக்கள் வீங்குதல், நெஞ்சுவலி போன்ற நோயறிகுறிகளும் காணப்படும்.
▪ இரவு நேரக் காய்ச்சல்.
▪ உடல் நிறை குறைவடைதல்
▪ உணவில் விரும்பமின்மை
▪ இரவு நேரத்தில் வியர்த்தல்
▪ களைப்பாகக் காணப்படல்
காசநோய்க் கிருமி
பக்ரீரியா (Mycobacterium tuberculosis) கலமென்சவ்வில் 200இற்கு மேற்பட்ட பிறபொருள் பதார்த்தங்களைக்கொண்டுள்ளது. அதனாலேயே இதற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்தல் கடினமாக உள்ளது. நுணுக்குக் காட்டியில் கிருமிகள் மெல்லிய நீண்ட வளைவாகத் தனித்தனியே அல்லது கூட்டமாகக்காணப்படும். பக்ரீறியாவின் கலச்சுவர் அதிக கொழுப்பைக்கொண்டது.
நுணுக்கு காட்டி மூலம் பார்க்கையில் செந்நிறமாக இருக்கும்.
காசநோய் – வரலாறு 
காசநோய்க்கிருமி பல ஆயிரம் ஆண்டுகளாக உயிர்வாழுகின்றது என்பதற்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. சுமார் 10000 ஆண்டுகள் பழமையான ஜேர்மனிய நாட்டு மனித என்புக்கூடுகளில் இக்கிருமி அவதானிக்கப்பட்டுள்ளது. எகிப்திய மம்மிகளிலும் இக்கிருமி காணப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் காசநோய்க்கிருமிகள் உலக காலநிலை மாற்றங்களினால் அழிவுறாது தப்பி உயிர்வாழும் தன்மையைக் காணக்கூடியதாக உள்ளது. 
இன் நோயை ஏற்படுத்தும் நோய்க்கிரிமியை றொபேட்கொச் என்பவரால் 1882ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் நாள் நுணுக்குக்காட்டியால் கண்டறியப்பட்டது. 
உலக நாடுகளில் காசநோய்த் தாக்கம்
உலகில் 20 மில்லியன் மக்கள் காசநோயினால் தாக்கபட்டுள்ளனர்  இதில் 10மில்லியன் மக்களிற்குமேல் சளியில் கிருமி காணப்படுகின்றது. உலகில் காசநோயாளிகளில் பெரும்பாலானோர் ஆசியாக் கண்டத்தில் வசிக்கின்றனர்.  AIDS நோயாளிகளுக்கு காசநோய் பரம்பல் அதிகம் உள்ளதால் ஆபிரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் காசநோய் பரவி வருகின்றது. 
தென்கிழக்கு ஆசியாவில் காசநோய்த்தாக்கம் வங்களாதேசம், இந்தியா, பூட்டான், வடகொரியா, இந்தேனேசியா, மாலைதீவு, மியாமார், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கிழக்கு தீமோர் ஆகிய நாடுகளிலுள்ளது. யுத்தத்தினால் சீர்குலைந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் MDR-TB பரம்பல் அதிகம் உள்ளது.
இலங்கையில் காசநோய்
இலங்கையில் ஆண்டுதோறும் ஒரு இலட்சம் மக்களில் 54 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர்  இதில் 25 பேர் சளியில் கிருமி உள்ள காசநோயாளிகள். ஆண்டுதோறும் 9000 காசநோளாளர் சிகிச்சை பெறுகின்றனர். இதில் 4500 பேர் சளியில் கிருமி உள்ள காசநோயாளிகள். இலங்கையில் காசநோயாளிகள் அதிக அளவில் நெருக்கமான நகரங்களில் உள்ளனர். கிராமப்புறங்களில் சளிப்பரிசோதனை செய்யும் வசதிகள் குறைவு என்பதால் காசநோயாளர் இனம் காணப்படல் குறைவாக உள்ளது.
காசநோய் உள்ளதா என்பதை அறிவது எப்படி?
3 கிழமைகளுக்கு மேல் தொடர்ச்சியான இருமல்  
மாலை நேரக் காய்ச்சல்  
உடல் நிறையிழப்பு  
இருமும் போது இரத்தம் வெளியேறல்   
உணவில் விருப்பமின்மை   
உறவினர் ஒருவருக்கு காசநோய் இருந்தால்   
நண்பர்களுக்கு காசநோய் இருந்தால்   
சுவாசிப்பதில் சிரமம்   
இரவில் வியர்த்தல்   
நெஞ்சு நோவு   
உடல் களைப்பு   
சலரோக நோய் இருத்தல்   
மேற்கூறிய அறிகுறிகள் காணப்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலையில் சளிப் பரிசோதனையை கட்டாயமாக செய்துகொள்ள வேண்டும்.
காசநோய் பரவும் விதம்
▪ காசநோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைபெறாது இருப்பதனால்,
▪ இருமும் போதும்
▪ தும்மும் போதும்
▪ கதைக்கும் போதும்
▪ எச்சில், சளியினைத்துப்பும் போதும் கிருமிகள் காற்றினை அடைகின்றன. 
ஒருவருக்கு நோய் தொற்றுவது அவர் காசநோய்க்கிருமிகள் உள்ள காற்றினை எவ்வளவு நேரம் சுவாசிக்கிறார் என்பதிலும் காசநோய்க்கிருமிகளின் செறிவிலும் தங்கி உள்ளது. எனவே காற்றோட்டமான, சூரிய ஒளி உள்ள இடத்தில் வாழ்வதால் காசநோய்க்கிருமிகள் தொற்றும் வாய்ப்புக்குறைவு.
காசநோயினால் பாதிக்கப்படக்கூடியவர்கள் 
▪ காசநோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்
▪ எயிட்ஸ் நோய், சலரோகம், புற்று நோயுடையோர்.
▪ புகைப்பிடிப்பவர்கள்.
▪ போசாக்கு குறைபாடு உடையோர்.
▪ சனநெருங்கிய இடங்களில் வாழ்பவர்கள்.
▪ காற்றோட்டம், சூரியஒளி குறைந்த இடங்களில் வாழ்பவர்கள்.
▪ மதுபானம், போதைப்பொருள் பாவிப்போர்.
காசநோய்க்கிருமிகளைக் கண்டறியும் முறைகள்
1.சளிப் பரிசோதனை 
யாராவது ஒருவர் 3 கிழமைகளுக்கு மேல் இருமல் உடையவராயின் சளியினைப் பரிசோதனை செய்தல் வேண்டும். நோயாளி வந்தவுடன் ஒரு மாதிரியும் அடுத்தநாள் அதிகாலை மறு மாதிரியும் வைத்தியசாலையில் மறு மாதிரியும் சளிப்பரிசோதனை செய்யப்படும்.
சளியில் 105/ml என கிருமிகள் காணப்படின் மட்டுமே நுணுக்கு காட்டியினால் கண்டு பிடிக்க முடியும்.
2. ஏனைய முறைகள் 
a).வளர்ப்பு ஊடகங்களில் சளியினை இட்டு காசநோய்க் கிருமிகளின் பெருக்கத்தினை அவதானித்தல்.
b). தோற் சோதனை (மாண்டு பரிசோதனை) 
3. CXR நெஞ்சு எக்ஸ்கதிர்படம் 
4. இரத்தப்பரிசோதனை
காசநோய்க்கான சிகிச்சை - சிகிச்சை அளிப்பதன் நோக்கங்கள் 
காசநோயாளியை பூரணமாகக் குணமாக்குதல்.
காசநோயாளியை இறப்பிலிருந்தும், பின்விளைவுகளிலிருந்தும் பாதுகாத்தல்.
சமூகத்திற்கு நோய் பரவலைத்தடுத்தல்
காச நோய் மீள ஏற்படுவதைத் தடுத்தல்.
காசநோய்க்கிருமிகள் மருந்துக்கு எதிர்ப்புத் தன்மை பெறுவதைத் தடுத்தல்.
இவை குறுகிய காலத்துக்கு (பொதுவாக 6 மாதங்களுக்கு) ஒழுங்காக பூரணமாக மருந்தை உட்கொள்ளச் செய்வதன் மூலம் அடையப் படுகிறது. இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளிலும், மார்பு நோய் சிகிச்சை நிலையங்களிலும் காசநோய்க்கான சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. 
காசநோய்க்கான சிகிச்சை  வகை -1 
ஆரம்பத்தில் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும்சிகிச்சை. 
a) ஆரம்ப அவத்தை (Intensive Phase)
இக் காலப்பகுதியில் நோய்க்கிருமிகள் விரைவாகக் கொல்லப்படும். நோயாளி எறத்தாழ இரண்டு வாரங்களில் ஏனையோருக்கு தொற்றை ஏற்படுத்த முடியாத நிலைக்கு மாற்றப்படுவதுடன் நோய்க்கான அறிகுறிகளும் குணமடையும்.
இச் சிகிச்சையின் போது பின்வரும் மருந்துகள் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும்.
றைபம்பிசின் (Rifampicin)
ஐசோனியாசிட் ( Isoniazid)
பைறசினமைட் (Pyrazinamide)
எதம்பியுட்டோல் (Etambutol)
b)Continuation phase
தற்போது நான்கு வில்லைகளும் ஒன்றாக்கப்பட்ட தனி வில்லையாக உள்ளது. தொடர் அவத்தை இக்காலப் பகுதியில் உடலில் எஞ்சியுள்ள கிருமிகள் அழிக்கப்படும். றைபாம்பிசின், ஐசோனியாசிட் என்பன நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும்.
காசநோய்க்கான சிகிச்சை  வகை -2 
இச் சிகிச்சை மீளவும் காசநோய் வருபவர்களுக்கும், வகை 1 சிகிச்சை பயனளிகாதோருக்கும் சிகிச்சையினை முறையாகப் பெறாதோருக்கும் வழங்கப்படும். 
இதன்போது ஆரம்ப அவத்தையின் நான்கு மருந்துகளுடன் ஸ்ரெப்ரோமைசின் (Streptomycin) எனப்படும் ஊசியும் முதல் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும்.அடுத்த ஒரு மாதத்திற்கு நான்கு மருந்துகள் வழங்கப்படும்.
இறுதி ஐந்து மாதங்களுக்கு தொடர் அவத்தையின் இரண்டு மருந்துகளுடன் எதம்பியுட்டோல் வழங்கப்படும். மொத்தமாக எட்டு மாதங்களுக்கு சிகிச்சை வழங்கப்படும்.
காசநோயுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணல்
பாதிக்கப்படும் அங்கம் நோய் ஏற்பட எடுக்கும் காலம்
நுரையீரல் 3 - 7 மாதம்
நுரையீரல் சுற்றுச் சவ்வு 6 - 7 மாதம்
மூளை 1 - 3 மாதம்
என்பு 1 - 3 வருடம்
சிறுநீரகம் 5 - 7 வருடம்
உள்வட்டம் :
ஒரே வீட்டில் வசிப்பவர்கள் ஒரே அறையில் வேலைசெய்பவர்கள் சளிப்பரிசொதனை செய்தல் அவசியம்.
வெளிவட்டம் :
அயல் வீட்டில் உள்ளோர் சிலவேளைகளில் சளிப்பரிசோதனை செய்தல் அவசியம் சளிப்பரிசோதனை செய்யும் போது, BMI கணிக்க வேண்டும் BMI 18 விடக்குறைவாயின் காசநோய் தொற்றல் நிகழ்வு அதிகம். 
BCG தடுப்பு மருந்து ஏற்றல்
BCG தடுப்பு மருந்து குழந்தை பிறந்து 24 மணி நேரத்தினுள் சுகதேகியாகக் காணப்படுமிடத்து ஏற்றப்படுகின்றது.
காசநோய் ஏற்படுவதை இது முற்றாகத் தடை செய்யாது.
இது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் மூளைக்காசம், மில்லியறி காசம் போன்ற காச நோயின் ஆபத்தான நிலைகளிலிருந்து பாதுகாக்கின்றது. 
BCG போடப்படும் இடது கையின் மேற்புறத்தில் 6 மாதத்தில் அடையாளம் வராவிடின் மீளவும் தடுப்பு மருந்து ஏற்றல் அவசியம்.
மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மையுள்ள காசநோய் கிருமிகள்
MDR-TB - Rifampicin மருந்திற்கும் INAH மருந்திற்கும் எதிர்ப்புத் தன்மை உடையது. 
XDR-TB - இது MDR TB இற்கு பாவிக்கும் மருந்துகளில் Amikacin, kanamyain Capreomycin இற்கும் ofloxacin, ciprofloxacin  இற்கும் எதிர்ப்புத் தன்மை உடையது.
உட்கொள்ளும் காசநோய் மருந்துகளின் பக்கவிளைவுகள் - ஆபத்து அற்றவை 
ஓங்காளம், உணவில் விருப்பம் இன்மை
சிறுநீர் செந்நிறமாக போதல்
மூட்டுக்களில் நோ
பாதத்தில் எரிவு
ஆபத்தானவை
தோலில் சொறி, எரிச்சல்
தலைச்சுற்று
காதுகேளாத நிலை
தோல், கண்கள் மஞ்சள் நிறமடைதல்
அடிக்கடிவாந்தி ஏற்படல்
கண்பார்வை குறிப்பாக நீலம், பச்சை வேறுபடுத்தல் கடினம். 
மருந்துகளை ஒழுங்காக எடுக்காதவிடத்து ஏற்படும் பாதிப்புக்கள்
சரியான அளவு மருந்துகளை உரிய காலத்திற்கு உபயோகிக்காது விடுமிடத்து மருந்திற்கு எதிர்ப்புத்தன்மை உடைய காசநோய்க்கிருமிகள் உருவாகும். இதனால் தனது குடும்பத்தினருக்கும் அயலவர்கள் நண்பர்களிற்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவார்.மருந்துகளை சரிவரப் பாவிக்காதவர்கள் 50% மானோர் 5 வருடங்களிற்குள் இறந்து விடுகின்றனர். இடைநடுவே சிகிச்சையினைக் கைவிடுபவர்களுக்கு மீளவும் சிகிச்சையினை ஆரம்பித்தல். பொருளாதார ரீதியிலும் உளரீதியிலும் சுமையாக அமையும். 
காசநோய்க் கிருமி பரவாது பாதுகாக்க
▪ நோயாளி இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டையால் ▪ முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
▪ கண்ட கண்ட இடங்களில் துப்பக்கூடாது. நோயாளியின்
▪ சளியினை புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்.
▪ நோயாளி ஆரம்பத்திலேயே இனங்காணப்பட்டு பூரணமாக உரிய சிகிச்சை பெறப்பட வேண்டும்.
▪ நோயாளியுடன் நெருங்கிய தொடர்புடைய அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
▪ போஷாக்கினை நல்ல நிலையில் பேணுவதுடன் உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.
▪குளிரூட்டப்பட்ட இடங்களில் காசநோய்கிருமிகள் அதிக நேரம் உயிர் வாழும். எனவே அவ்விடங்களிலும் சனக்கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும் அதிகமாக நிற்பதைத் தவிர்க்க வேண்டும்
காசநோயும் கர்ப்பிணித் தாய்மாரும்
கற்பிணித்தாய்மாராக இருந்தாலும் காசநோய்க்கான மருந்தினை நோய் ஏற்படின் எடுக்க வேண்டும். பாலூட்டும் தாய்மாரும் நோய் ஏற்படின் காசநோய்க்கான மருந்தினை எடுப்பதுடன், குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பாலூட்டல் அவசியம்.
காசநோயும் எயிட்ஸ் நோயும்
எயிட்ஸ் நோயாளிகளில் 50% மானோர் காசநோய்த் தொற்றாலேயே இறக்கின்றனர். காசநோயாளிகளுக்கு எயிட்ஸ் நோய் வரும் சாத்தியம் இல்லை. ஆனால் எயிட்ஸ் நோயாளிகளுக்கு காசநோய் வரும் சாத்தியம் அதிகம் உண்டு எனவே காசநோயாளிகளை எயிட்ஸ் நோய்ப் பரிசோதனைக்கு உட்படுத்தல் அவசியம். காசநோயாளிக்கு எயிட்ஸ் நோய் காணப்படும் போது முதலில் காசநோயிற்கே சிகிச்சை அளிக்க முன்னுரிமை அளிக்கப்படும்
காசநோயாளிக்கு நாளொன்றுக்கான உணவு - அசைவ போசனம்
தானியம் - 200g
பருப்பு - 30g
கச்சான் - 30g
பால் - 1l
முட்டை - 1
இறைச்சி / மீன் - 50g
இலைக்கறி - 50g
காய்கறி - 50g
கரட் - 100g
வாழைப்பழம், மாம்பழம், பப்பாசிப்பழம் - 200g
எண்ணெய் - - 30g
சீனி - 80g
சைவ போசனம்;
தானியம் - 200g
பருப்பு - 50g
கச்சான் - 50g
பால் - 1.5 l
பச்சை இலைகள் - 50 g
காய்கறிகள் - 50g
கரட் - 50g
வாழைப்பழம், மாம்பழம், பப்பாசிப்பழம் - 100g
தாவர எண்ணைய்; - - 30g
சீனி - 80g
குறுகியகால நேரடிக் கண்காணிப்பிலான சிகிச்சை (DOTS) 
மருந்துகளை ஒழுங்காக உள்ளெடுப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எளியதொரு முறையாகும். 
இம்முறையில் நோயாளி தன் வீட்டிற்கு மிக அருகில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு தினமும் சென்று அங்கு உள்ள சுகாதார உத்தியோகத்தர் முன்னிலையில் மருந்துகளை உள்ளெடுப்பார். 
தினமும் குளிசைகள் உள்ளெடுப்பது பதிவட்டையில் அடையாளப்படுத்தப்படும். நோயாளி சிகிச்சைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் உடனடியாக மீளவும் சிகிச்சைக்கு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
காசநோய் தொடர்பான காரணிகள்
நோய் பற்றிய அறியாமையே சமூகவடுவிற்கான பிரதான காரணம். காசநோயினை முற்றாக்கக் குணப்படுத்தலாம்.
காசநோய் ஒரு பரம்பரை நோயல்ல என்பதை அறிதல் வேண்டும்.
மருந்துகள் எடுப்பதால் நோய் தொற்றும் தன்மை இரண்டு கிழமைகளில் முற்றாக இல்லாது போகும்.
தொடர்ச்சியாக 3 கிழமைகளுக்கு மேல் இருமல் இருப்போர் சளிப்பரிசோதனைக்கு முன்வரல் வேண்டும்